துணைத் தலை­மைச் சட்ட அதி­காரி பத­வி­யி­லி­ருந்து உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கி­றார் ஹரி­கு­மார் நாயர்

துணைத் தலை­மைச் சட்ட அதி­காரி பத­வி­யி­லி­ருந்து உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கி­றார் ஹரி­கு­மார் நாயர்

2 mins read
89cffdf9-0bea-42fe-a461-dd25b0e1b2f3
உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக பதவி வகிக்­கும் திரு ஆங் செங் ஹோக் (இடது) அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் துணைத் தலை­மைச் சட்ட அதி­காரி பத­வியை ஏற்­றுக்­கொள்­வார். அதே­போல், தற்­போது துணைத் தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யாக உள்ள திரு ஹரி­கு­மார் நாயர் அடுத்த ஆண்டு ஜன­வரி 2ஆம் தேதி முதல் உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கப் பொறுப்­பேற்­றுக்கொள்­வார். படங்­கள்: தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் -

அதி­பர் ஹலிமா யாக்­கோப், தற்­போது உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யாக பதவி வகிக்­கும் திரு ஆங் செங் ஹோக்கை புதிய துணைத் தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யாக நிய­மித்­துள்­ளார்.

அடுத்த மாதம் (அக்­டோ­பர்) 1ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு திரு ஆங் அந்­தப் பொறுப்பை வகிப்­பார் என்று தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

அதே­போல் தற்­போது துணைத் தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யா­கப் பதவி வகிக்­கும் திரு ஹரி­கு­மார் நாயர், அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கப் பொறுப்­பேற்­றுக் கொள்­வார் என்­றும் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் சட்­டத் துறை­யில் இதர உயர்­மட்ட பொறுப்­பு­க­ளைப் பார்க்­கை­யில், தலை­மைச் சட்ட அதி­காரி திரு லூசி­யன் வோங், அதே பொறுப்­பில் மேலும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு நீடிப்­பார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ­ரது பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜன­வரி 14ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு ஜன­வரி 13ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­

பட்­டுள்­ளது.

திரு வோங் இந்­தப் பொறுப்பை முத­லில் 2017ல் ஏற்­றுக்­கொண்­டார். பின்­னர் 2020ல் அவ­ரது பதவிக் காலம் 2023ஆம் ஆண்டு வரை நீட்­டிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை, தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யாக இருப்­ப­வர் அர­சாங்க வழக்­க­றி­ஞர் பொறுப்பை வகிப்­பார். எந்­தக் குற்­றம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­யைத் தொடங்­க­வும் நடத்­த­வும் நிறுத்­த­வும் தலை­மைச் சட்ட அதி­கா­ரிக்கு அதி­கா­ரம் உண்டு.

மற்­றொரு துணைத் தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யான திரு லய­னல் யீயின் பதவி கால­மும் மேலும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அவர் தொடர்ந்து அந்­தப் பத­வியை அடுத்த ஆண்டு ஜன­வரி 14ஆம் தேதி முதல் 2026ஆம் ஆண்டு ஜன­வரி 13ஆம் தேதி வரை வகிப்­பார்.

திரு யீ, முத­லில் 2017ஆம் ஆண்டு ஜன­வரி 14ஆம் தேதி துணைத் தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யாக மூன்று ஆண்­டு­க­ளுக்கு நிய­மிக்­கப்­பட்­டார். பின்­னர் 2020ஆம் ஆண்டு ஜன­வரி 14ஆம் தேதி அவ­ரது பதவி காலம் மேலும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டது.

"துணைத் தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நீதி­பதி ஆங், உயர் நீதி­மன்­றத்­தில் மதிப்­பு­மிக்க நீதி­ப­தி­யாக இருப்­ப­வர். சிங்­கப்­பூ­ரின் சட்­டத் துறை மற்­றும் குற்­ற­வி­யல் நீதித் துறை பற்­றி­யும் அவ­ருக்கு ஆழ்ந்த

அனு­ப­வம் உண்டு," என்று திரு வோங் தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

தலை­மைச் சட்ட அதி­காரி அலு­வ­ல­கத்­தில் திரு நாய­ரின் சேவை­யும் பாராட்­டப்­ப­டு­கிறது. சிட்டி ஹாவஸ்ட் வழக்கு, தேர்ந்­தெ­டுக்­கப்­படும் அதி­பர் முறைக்கு எதி­ரான அர­சி­ய­ல­மைப்­புச் சவால் போன்ற பல்­வேறு பிர­ப­ல­மான வழக்­கு­களை திரு நாயர் மிகச் சிறப்­பா­கக் கையாண்­டார் என்று திரு வோங் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

திரு நாயர் தமது புதிய பத­வி­யில் மேலும் சிறந்து விளங்க திரு வோங் தமது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்கொண்­டார்.