சிங்கப்பூரில் பழைய மோட்டார் சைக்கிள்கள் 2028ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டு களுக்கும் மேலாகிவிட்டது.
இந்நிலையில், 2003ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கிளாசிக் வாகனத் திட்டத்தில் சேர்க்கப்படும் தகுதியை எட்டும் வரை சிறப்புத் திட்டத்தின்கீழ் உரிமையாளர்கள் வைத்திருக்கலாம்.
பதிவு செய்யப்பட்டு குறைந்தது 35 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கிளாசிக் வாகனத் திட்டத்தின்கீழ் இடம்பெற வாகனங்கள் தகுதி பெறுகின்றன.
இத்தகைய வாகனங்களுக்கான சாலை வரி மற்ற வாகனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு.
ஆனால் அவற்றை ஓர் ஆண்டில் 28 நாள்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தி மேலும் 17 நாளுகளுக்குப் பயன்படுத்தலாம்.
இந்தப் புதிய திட்டம் குறித்து தகுதி பெறும் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களிடம் கூடிய விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.