'வழக்கறிஞர் தேர்வில் ஏமாற்றியவர்கள் தங்கள் செயல் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்'

2 mins read
bb04fea6-c3e3-4008-b7de-b04183a28bde
-

2020 வழக்­க­றி­ஞர் தேர்­வில் ஏமாற்று வேலை­யில் ஈடு­பட்­ட­வர்­கள், தங்­கள் செயல்­பா­டு­கள் குறித்து கவ­ன­மாக சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும் என்று தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் கூறி­யுள்­ளார்.

வழக்­க­றி­ஞ­ரா­வ­தற்­கான தங்­கள் விண்­ணப்­பங்­களை திரும்­பப் பெற்­றுக்­கொண்ட மாண­வர்­கள், சட்­டத் தொழி­லுக்கு வெளியே தங்­கள் நேரத்தை எவ்­வாறு செல­வி­டப் போகி­றோம் என்­பது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

தங்­கள் விண்­ணப்­பங்­களைத் திரும்­பப் பெற்­றுக்­கொள்ள அந்த மாண­வர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

வழக்­க­றி­ஞ­ரா­வ­தற்­கான தங்­கள் விண்­ணப்­பங்­களை திரும்­பப் பெற்றுக்­கொண்ட கடைசி நான்கு மாண­வர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை­கள் வேறு­பட்­ட­தற்­கான கார­ணத்­தை­யும் தலைமை நீதி­பதி மேனன் விளக்­கி­னார்.

விசா­ரணை தொடங்­கி­ய­தில் இருந்து மாண­வர்­களில் இரு­வ­ரான திரு லிம் ஸி யியும் குமாரி அன­பெல் ஆவ் ஜியான் என்­னும் ஒத்து­ழைக்க முன்­வந்­த­னர். எனவே, இவர்­க­ளுக்கு குறு­கிய காலத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், குமாரி ஜோலீன் ஓங் ஜியா யி, சிங்­கப்­பூர் சட்­டக் கல்விக் கழ­கத்­தின் விசா­ர­ணைக்கு உட­ன­டி­யாக ஒத்­து­ழைக்­க­வில்லை. கூடு­தல் விசா­ர­ணைக்­குப் பிறகே தம் முறை­கேட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார். திரு லிம்முடனும் குமாரி ஆவுடனும் தொடர்பு கொண்டதை அவர் தொடக்கத்தில் ஏற்க மறுத்தார். திரு ஷான் வோங் வாய் லூங், தாம் செய்த முறை­கேட்டை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

சட்­டத்­து­றை­யில் வழி­காட்டுதலுக்­காக மதி­யு­ரை­யா­ளர்­களை நாட மாண­வர்­க­ளி­டம் வலி­யு­றுத்­திய தலைமை நீதி­பதி மேனன், தங்­களு­டைய முறை­கேட்­டால் வெளிச்­சத்­துக்கு வந்த பண்­பு­நெறி சார்ந்த விவ­கா­ரங்­க­ளுக்கு தீர்­வு­காண அவர்­கள் வழி­மு­றை­க­ளைத் தேடு­வர் என தாம் நம்­பு­வ­தா­க கூறினார்.

"இழக்­கப்­பட்ட நம்­பிக்­கையை மீட்­டெ­டுக்க திரு வோங், குமாரி ஓங், திரு லிம், குமாரி ஆவ் ஆகி­யோர் உழைப்­பர் என நான் நம்­பு­கி­றேன்," என்­றார் அவர்.