அடுத்த பத்து ஆண்டுகளில் அதானி குழுமம் $143 பில்லியன் முதலீடு செய்யும்

அடுத்த பத்து ஆண்டுகளில் அதானி குழுமம் $143 பில்லியன் முதலீடு செய்யும்

1 mins read
b5a80b93-4e96-4160-83a5-d19d25c1f1d3
ஃபோர்ப்ஸ் குளோபல் சிஇஓ மாநாட்டில் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி நேற்று முக்கிய உரையாற்றினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உல­கப் பொரு­ளி­யல் முன்­னெப்­போதும் இல்­லாத சூழலை எதிர்­நோக்­கு­கிறது. பண­வீக்­கத்தை எதிர்­கொள்ள மத்­திய வங்­கி­கள் வட்டி விகி­தங்­களை உயர்த்­து­வதால், பொரு­ளி­யல் மந்­த­நிலை ஏற்­படும் அபா­ய­மும் நில­வு­கிறது. உக்­ரேன்-ரஷ்யா போர் புவி­சார் அர­சி­யல் நில­வ­ரத்தை மாற்­றி­யுள்­ளது. இவை­ எல்­லாம் இருந்­தும், கொந்­த­ளிப்­பான சூழ­லில் பல­ன­டை­யும் நிலை­யில் இந்­தியா உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் நேற்று நடை­பெற்ற ஃபோர்ப்ஸ் குளோ­பல் சிஇஓ மாநாட்­டில் உரை­யாற்­றிய இந்­தி­யத் தொழி­ல­தி­பர் கௌதம் அதானி இத­னைக் கூறி­னார்.

ஐரோப்­பிய ஒன்­றிய பொரு­ளி­யல் மெது­வ­டை­வ­தை­யும் உலக நாடு­க­ளால் சீனா ஒதுக்­கப்­பட்டு வரு­வ­தை­யும் சுட்­டிய இவர், "அர­சி­யல், சந்தை கண்­ணோட்­டத்­தில் இருந்து பார்க்­கை­யில், பிர­கா­ச­மான சில இடங்­களில் ஒன்று இந்­தியா," என்­றார்.

இதன் பொருட்டு, அடுத்த 10 ஆண்­டு­களில் அதானி குழு­மம் US$100 பில்­லி­யன் ($143 பி.) முதலீடு செய்­யும். ஒருங்­கி­ணைந்த பசுமை ஹைட்­ரோ­ஜன் சார்ந்த தொழி­லி­லும் US$70 பில்­லி­யன் முத­லீடு செய்ய இக்­கு­ழு­மம் கடப்­பாடு கொண்­டுள்­ளது.

இந்­திய தரவு மையச் சந்­தை­யி­லும் அதானி குழு­மம் வளர்ச்சி வாய்ப்­பு­களை நாட­வி­ருக்­கிறது.