வாட்ஸ்அப் செயலியில் இரு பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய அச்செயலியின் ஆக அண்மைய வடிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள சிங்கப்பூரில் உள்ள வாட்ஸ்அப் பயனாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். இந்தக் குறைபாடுகளால் ஊடுருவிகள் இச்செயலியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.
இதுகுறித்து சிங்கப்பூர் கணினி அவசர பதில் நடவடிக்கைக் குழு நேற்று வெளியிட்ட தகவலில் இதைத் தெரிவித்தது. பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியின் ஆக அண்மைய வடிவத்தை உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அது கூறியது.
முதலாவது பாதுகாப்புக் குறைபாடு, பயனாளர் காணொளி அழைப்பை மேற்கொள்ளும்போது ஊடுருவிகள் இச்செயலியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்.
இரண்டாவது பாதுகாப்புக் குறைபாடு, வாட்ஸ்அப்பின் காணொளிக் கோப்பைக் கையாளும் அங்கத்தைப் பாதிக்கிறது. குறிப்பிட்ட ஒரு பயனாளரிடம் காணொளிக் கோப்புகளை ஊடுருவிகள் அனுப்பி, பயனாளர்கள் அவற்றைக் காண வைப்பர்.

