சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்; ஆடவர் கைது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்; ஆடவர் கைது

2 mins read
09b9dfea-1b63-4416-8e7e-28075b4daaf6
எஸ்கியூ33 விமானத்தில் பயணம் செய்த பயணிகள், காலை 9.40 மணியளவில் விமான நிலையத்திலிருந்து வெளியேறினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எஃப்-16 ரக போர் விமானங்களின் உதவியுடன் விமானம் தரையிறங்கியது

அமெ­ரிக்­கா­வின் சான் ஃபிரான்­சிஸ்கோ நக­ரி­லி­ருந்து நேற்று அதி­காலை சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கிய சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) விமா­னத்­தில் வெடி­குண்டு மிரட்­டல் விடுத்த 37 வயது ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

அவர் வெளி­நாட்­ட­வர் என அறி­யப்­ப­டு­கிறது.

எஸ்­கியூ33 விமா­னம் திங்­கள்­கி­ழமை உள்­ளூர் நேரப்­படி இரவு 10.26 மணிக்கு சான் ஃபிரான்­சிஸ்கோ நக­ரி­லி­ருந்து புறப்­பட்­டது.

அந்த விமா­னம், சிங்­கப்­பூர் ஆகா­யப் படை­யின் எஃப்-16 ரக போர் விமா­னங்­க­ளின் உத­வி­யு­டன் சாங்கி விமான நிலை­யத்­தில் நேற்றுக் காலை 5.50 மணிக்­குத் தரை­யி­றங்­கி­யது. விமா­னத்­தில் வெடி­குண்டு மிரட்­டல் விடுக்­கப்­பட்­டது குறித்து நேற்று அதி­காலை 2.40 மணிக்கு தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் காவல்­துறை தெரி­வித்­தது.

இந்த வெடி­குண்டு மிரட்­டல் போலி­யா­னது என பிறகு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. கைது செய்­யப்­பட்ட ஆட­வர், விமா­னத்­திற்குள் கொண்டு­வந்த பையில் வெடி­குண்டு வைத்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார். பின்­னர் அவர் விமா­னச் சிப்­பந்­தி­க­ளைத் தாக்­கி­னார் என்­றும் சிப்­பந்­தி­கள் அந்த ஆட­வ­ரைக் கட்­டுப்­ப­டுத்­தி­னர் என்­றும் காவல்­துறை குறிப்­பிட்­டது.

விமா­னத்­தில் பய­ணம் செய்த பெண் ஒரு­வர் இது குறித்த புகைப்­படங்­க­ளைத் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­தார். ஆட­வர் ஒரு­வர் விமா­னத்­தில் வெடி­குண்டு இருப்­ப­தாக கத்­தி­ய­தால் நான்கு மணி நேரம் தாம­தம் ஏற்­பட்­டது என்­றும் பின்­னர் அந்த ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார் என்றும் அந்­தப் பயணி கூறி­னார்.

சாங்கி விமான நிலை­யத்­தின் தனி­மை­யான இடத்­துக்­குச் சென்ற விமா­னம், பாது­காப்­புப் பரி­சோ­தனை­க­ளுக்­குப் பிறகு காலை 9.20 மணிக்கு முனை­யம் 3க்கு வந்­தது.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் ரசா­யன, உயி­ரி­யல், கதி­ரி­யக்க, வெடி­குண்டு தற்­காப்­புக் குழு­வும் விமான நிலைய காவல்­துறை பிரி­வும் விசா­ர­ணைக்கு அனுப்­பப்­பட்­டன என்­றும் பின்­னர் வெடி­குண்டு மிரட்­டல் பொய்­யா­னது என்று உறுதி செய்­யப்­பட்­டது என்­றும் தற்­காப்பு அமைச்சு தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­துள்­ளது.

போர் விமா­னங்­க­ளின் உத­வி­யு­டன் விமா­னம் சாங்கி விமான நிலை­யத்­துக்கு வந்­த­போது அதில் இருந்த பய­ணி­கள் அமை­தி­யாக இருந்­த­னர்.

விமா­னப் பணி­யா­ளர்­கள் சூழ்­நி­லை­யைத் திறம்­பட கையாண்­ட­தா­க­வும் அவர்­கள் அள­வுக்கு அதி­க­மாகப் பதற்­றம் அடை­ய­வில்லை என்றும் விமா­னத்­தில் இருந்த அமெ­ரிக்­கப் பய­ணி­யான அலிஸ் என்­பவர் கூறி­னார்.