டெங்கி சம்பவங்கள் 600க்குகீழ் குறைவு

டெங்கி சம்பவங்கள் 600க்குகீழ் குறைவு

1 mins read
64248c5f-fae4-488d-b9b8-7baeee91c2c7
-

சிங்­கப்­பூ­ரில் ஆண்­டு­தோ­றும் டெங்­கிப் பர­வல் அதி­க­ரிக்­கும் பரு­வத்­திற்கு முன்­பா­கவே இந்த ஆண்டு டெங்­கிச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை உச்­சத்தை எட்­டிய நிலை­யில், தற்­போது டெங்கி பாதிப்பு குறை­வ­தாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் கூறி­யுள்­ளது.

இந்த ஆண்­டின் முற்­பா­தி­யில், கொசுக்­கள் இனப்­பெ­ருக்­கம் செய்­வ­தால் டெங்கி பர­வும் அபா­ய­மிக்க ஏறக்­கு­றைய 11,300 இடங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டன.

இந்­நி­லை­யில், இம்­மா­தம் பதி­வான வாராந்­தர டெங்­கிச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 600க்குக் கீழ் குறைந்­துள்­ளது. சென்ற மே மாதம் இது 1,568ஆக இருந்­தது.

ஜூன் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், இம்­மா­தம் டெங்கி பர­வும் அபா­யம் மிக்க இடங்­க­ளின் எண்­ணிக்கை 62 விழுக்­காடு குறைந்­தி­ருப்­ப­தாக வாரி­யம் நேற்று தெரி­வித்­தது.

சென்ற செவ்­வாய்க்­கி­ழமை நில­வ­ரப்­படி, இத்­த­கைய 144 இடங்­கள் மட்­டுமே காணப்­ப­டு­வ­தாக வாரி­யத்­தின் இணை­யத்­த­ளம் தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

2021ஆம் ஆண்டு நாடு முழு­வதும், கொசுக்­கள் இனப்­பெ­ருக்­கம் செய்­யும் 18,500 இடங்­கள் கண்­ட­றி­யப்­பட்­டன.

இந்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் சிங்­கப்­பூ­ரில் டெங்­கிப் பர­வல் எதிர்­பாரா வித­மாக அதி­க­ரித்­தது. வழக்­க­மாக ஜூன் முதல் அக்­டோ­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில்­தான் இங்கு டெங்கி அதி­க­மா­கப் பர­வும்.

கடு­மை­யான முயற்­சி­யால் நிலை­மை­யைச் சமா­ளிக்க முடிந்­தா­லும், தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்­க­வேண்­டி­யது அவ­சி­யம் என்று வாரி­யம் வலி­யு­றுத்­தி­யது.

இந்த ஆண்­டின் முற்­பா­தி­யில் கண்­ட­றி­யப்­பட்ட டெங்­கித் தொற்று இடங்­களில் 63 விழுக்­காடு வீடு­கள், 25 விழுக்­காடு பொது இடங்­கள், நான்கு விழுக்­காடு கட்­டு­மானத்தலங்­கள், எட்டு விழுக்­காடு பள்­ளி­கள், தங்­கு­வி­டு­தி­கள், தொழிற்­சா­லை­கள் போன்­றவை என்­பதை அது சுட்­டி­யது.