பாட்டாளிக் கட்சியின் இளையர் பிரிவும் கட்சியின் கொள்கை ஆய்வுக் குழுவும் இணைந்து, கொள்கை மாற்றம் தொடர்பான யோசனைகளைச் சமர்ப்பிக்க வகைசெய்யும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
பாட்டாளிக் கட்சி கொள்கைச் சவால் 2022 என்பது அதன் பெயர்.
போட்டியாளர்கள் கொடுக்கப்படும் நான்கு தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இளையர்கள் தங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவும் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கலந்தாலோசித்து அவற்றுக்கு மெருகூட்டி, அதுகுறித்த விவாதங்களில் கலந்துகொள்ளவும் இப்போட்டி வகைசெய்யும். 40 வயதும் அதற்குக் கீழான வயதுமுடைய சிங்கப்பூரர்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
அடுத்த மாதம் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை இளையர்கள் தங்கள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

