தரநிலைச் சான்றிதழுக்கான நடைமுறைகளைக் கடைப்பிடித்ததால், சிங்கப்பூரின் 70 விழுக்காட்டு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பலனடைந்துள்ளன.
அவை, ஏற்றுமதி, அனைத்துலக வர்த்தகம் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளைப் பெற முடிந்ததாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஆய்வில் 1,000க்கும் மேலான நிறுவனங்கள் பங்கெடுத்தன.
தரநிலை நடைமுறைகளைக் கடைப்பிடித்த 90 விழுக்காட்டு நிறுவனங்கள், போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால் தங்கள் பொருள்களிலும் சேவைகளிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருப்பதைக் காணமுடிவதாகக் கூறின.

