தேசிய சம்பள மன்றம் இப்போது மிக முக்கியம் மன்றத்தின் 50வது ஆண்டுவிழா விருந்தில் துணைப் பிரதமர் புகழாரம்

1 mins read
e36f331f-fc26-4c41-9b6f-b96df5f179c7
தேசிய சம்பள மன்றத்தின் 50வது ஆண்டுவிழா விருந்து நிகழ்ச்சி நேற்று நடந்தது. துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அதில் உரையாற்றினார்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம் கார­ண­மாக வாழ்க்­கைச் செலவு கூடும் நிலை­யில், தேசிய சம்­பள மன்­றம் முன் எப்­போ­தை­யும்விட இப்­போது மிக முக்­கி­ய­மான ஒன்­றாக இருக்­கிறது என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

அந்த மன்­றம் சிங்­கப்­பூ­ரின் தொடர் வெற்­றி­யை­யும் செல்­வச்­செ­ழிப்­பை­யும் உறு­திப்­ப­டுத்த தொடர்ந்து முக்­கியப் பணி­யாற்றி வரும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங், மன்­றத்­தின் 50வது ஆண்டு விருந்­தில் கலந்­து­கொண்­டார். அந்த நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய துணைப் பிர­த­மர், மன்­றத்தைப் பெரி­தும் பாராட்­டி­னார்.

மன்­றம் தோற்றுவிக்­கப்­பட்­ட­தன் கார­ண­மாக தொழி­லா­ளர் உற­வு­களில் மிக­வும் நிலை­யான, முன்­னேற்­ற­க­ர­மான அணு­கு­முறை கடைப்­பி­டிக்­கப்­பட வழி ஏற்­பட்டு உள்ளதாக அவர் தெரி­வித்­தார்.

தாக்­குப்பிடிக்­கக்­கூ­டிய சம்­பள அதி­க­ரிப்­பைச் சாதிக்­க­வும் வேலை­களைப் பாது­காக்­க­வும் பொரு­ளியல் நெருக்­க­டி­க­ளின்போது பொருளி யல் மீட்­சியை மேம்­ப­டுத்­த­வும் உதவு­கின்ற சம்­ப­ளம், சம்­ப­ளம் தொடர்­பான வழி­காட்டி நெறி­மு­றை­களை வெளி­யி­டு­வ­தற்­காக ஆண்டுதோறும் தேசிய சம்­பள மன்­றம் கூடு­கிறது.

முத­லா­ளி­கள், தொழிற்­சங்­கங்­கள், அர­சாங்­கம் ஆகிய முத்­த­ரப்பு ­க­ளை­யும் கொண்ட இந்த மன்­றம், 1972 முதல் செயல்­பட்டு வரு­கிறது.

மன்­றத்தின் 50வது ஆண்­டு­விழா­ விருந்­தில் மன்­றத்­தின் கடந்­த­கால, நிகழ்­கால உறுப்­பி­னர்­களும் முக்­கி­ய­மான முத்­த­ரப்புப் பங்­கா­ளி­களும் கலந்­து­கொண்­ட­னர்.

சம்­ப­ளம், சம்­ப­ளம் தொடர்­பான பிரச்­சி­னை­களில் தேசிய அள­வில் கருத்­தி­ணக்­கத்­தைப் பேணி உரு­வாக்­கு­வ­தற்­கான முக்­கி­ய­மான முத்­த­ரப்புத் தள­மாக மன்றம் திகழ்ந்து வரு­கிறது.