தேசியப் பாதுகாப்பு, பாதுகாவல் கண்காணிப்புக் குழுமத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடந்தது.
சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றுடன் சேர்ந்து செயல்பட்டு வேலையிடங்களில் பாதுகாப்பையும் பாதுகாவலையும் மேம்படுத்துவதில் இந்தக் குழுமத்தின் உறுப்பினர்கள் ஆற்றும் தொண்டுகளை அங்கீகரித்து, சிறப்பித்து, பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
உள்துறை துணை அமைச்சர் திருவாட்டி சுன் ஷுவெலிங் நேற்று விருதுகளை வழங்கினார்.
மொத்தம் 57 பாதுகாப்பு, பாதுகாவல் கண்காணிப்புக் குழும உறுப்பினர்கள், தனிச்சிறப்புமிக்க குழுமம் மற்றும் தனிநபர் விருதைப் பெற்றனர். இதர 80 உறுப்பினர்கள் குழுமம், தனிநபர், பாராட்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த ஆண்டு நிகழ்ச்சியில் 18 நிறுவனங்களுக்கு மிரட்டல் பரிசோதனை ஒருங்கிணைந்த ஏற் பாட்டு முறை விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
எட்டு நிறுவனங்கள் சிறப்புப் பாராட்டு, தனிச்சிறப்பு விருதையும் இதர 10 நிறுவனங்கள் உயர் பாராட்டு மற்றும் பாராட்டு விருதையும் பெற்றன.
இந்த விவரங்களை சிங்கப்பூர் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.