ஆறு மாதம் முதல் நான்கு வயது சிறாருக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி

ஃபைசர் நிறுவனத்தின் கொமிர்னாட்டி கொவிட்-19 தடுப்பூசியை ஆறு மாதம் முதல் நான்கு வயது வரையிலான பிள்ளைகளுக்குச் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அறிவியல் ஆணையம் வியாழக்கிழமை (செப்டம்பர் 29) அன்று அதைத் தெரிவித்தது.

மருத்துவத் தரவுகளை கவனமாகப் பரிசீலித்ததாகவும் இந்த வயதுப் பிரிவு பிள்ளைகளுக்கு ஃபைசரின் கொமிர்னாட்டி கொவிட்-19 தடுப்பூசியைச் செலுத்தினால் ஆபத்துகளைவிட பலன்களே அதிகம் என்று ஆணையம் கூறியது.

இந்த வயதுப்பிரிவில் உள்ள சிறார்களுக்கு மூன்று தவணைகளில் தடுப்பூசி செலுத்தப்படும். ஒவ்வொரு முறையும் 3 மைக்ரோகிராம் அளவிலான தடுப்புமருந்து அளிக்கப்படும்.

முதல் தடுப்பூசி செலுத்தப்பட்ட மூன்று வாரங்களில் இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.

குறைந்தது எட்டு வாரங்கள் இடைவெளிக்குப் பின்னர் மூன்றாவது தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்தது.

தடுப்பூசியின் பயன்பாடு குறித்து கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான நிபுணர் குழுவும் சுகாதார அமைச்சும் உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என்று ஆணையம் சொன்னது.

ஆறு மாதங்கள் முதல் நான்கு வயது வரையிலான சிறாருக்கு ஏற்கெனவே மொடர்னாவின் ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!