உலகப் பொருளியல் நெருக்கடியிலிருந்து மீள புத்தாக்கம், ஒத்துழைப்பு உதவும்: தர்மன்

உலகப் பொருளியல் நெருக்கடியிலிருந்து மீள புத்தாக்கம், ஒத்துழைப்பு உதவும்: தர்மன்

2 mins read
a4db23c9-2503-42c5-8fd1-022279335175
-

தற்­போது நில­வி­வ­ரும் பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் இருந்து உல­கப் பொரு­ளி­யல் மீண்­டெழ, நாடு­க­ள்­புத்­தாக்­க­த்தைக் கடைப்பிடிப்பதும் உலக நாடு­கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல்­ப­டு­வ­தும் உதவும் என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் கூறி­யி­ருக்­கி­றார்.

'மில்­கன் இன்ஸ்­டி­டி­யூட் ஏஷியா சமிட் 2022' மாநாட்­டில் நேற்று பேசி­ய­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

உல­கம் தற்­போது எதிர்­நோக்கும் நெருக்­க­டிக்கு உட­னடித் தீர்­வு­கள் கிடை­யாது என்று சொன்ன அவர், நிதி நில­வ­ரம் மோச­ம­டைந்த பின்னரே அது மேம்­ப­டத் தொடங்­கும் என்­றார்.

"இந்த நீண்ட புய­லில் இருந்து வெளி­வர புத்­தாக்­கத்­து­டன் சேர்ந்து செயல்­பட வேண்­டும்," என்று அவர் கூறி­னார்.

எனி­னும், ஆசி­யா­வில் சில நாடு­கள் மற்ற நாடு­க­ளை­விட நெருக்­க­டி­யைத் திறம்­பட எதிர்­கொள்­ளும் என நம்­பிக்கை இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

"ஆசி­யா­வில் பெரிய மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட இந்­தி­யா­வும் தென்­கி­ழக்­கா­சி­யா­வும் மேலேறி வரு­கின்­றன. உரு­வெ­டுத்­து­வ­ரும் ஆசி­யா­வின் புதி­ய­தொரு பகுதி இது. உல­கிற்கு ஆக்­க­க­ர­மான சக்தி­யாக இது உள்­ளது," என்று திரு தர்­மன் விவ­ரித்­தார்.

புத்­தாக்­கத்­தைக் கட்­ட­மைக்க பொது, தனி­யார் துறை­கள் இரண்டும் தேவை என்ற அவர், உலகை மேம்­ப­டுத்­த­வும் கூடு­தல் பாது­காப்­பா­க­வும் வைத்­தி­ருக்க அவை தீர்­வு­களை வழங்க வேண்டும் என்று சொன்­னார்.

பொரு­ளி­யல் உரு­மாற்­றத்தை மேம்­ப­டுத்­த­வும் பரு­வ­நிலை மாற்றம் ஏற்­ப­டுத்­தும் அழிவை எதிர்த்து உல­கம் போராட புதிய தொழில்­நுட்­பங்­க­ளின் அளவு பெரி­தாக வேண்­டும் என்று திரு தர்­மன் குறிப்­பிட்­டார்.

ஆனால், இது நடக்க உலக நாடு­கள் சேர்ந்து செயல்­பட வேண்டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"உலக நாடு­கள் ஒத்துழைத்து, ஒன்­றா­கச் சேர்ந்து செயல்­ப­டு­வது இன்­ன­மும் சாத்­தி­யமே. பல­த­ரப்பு முறை நிறை­வற்­ற­தாக இருந்­தாலும்கூட அதை வலுப்­படுத்­து­வது சாத்­தி­யம்," என்று திரு தர்மன் சொன்­னார்.