தீப்பிடித்த வீட்டிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற உதவிய அண்டைவீட்டார்கள்

தீப்பிடித்த வீட்டிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற உதவிய அண்டைவீட்டார்கள்

2 mins read
5dd5dd1d-d9bd-42fa-9200-40a83ac1c638
புளோக் 340A செம்பவாங் குளோசில் உள்ள ஏழாவது மாடி வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து நிகழ்ந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புளோக் 340A செம்­ப­வாங் குளோ­சில் உள்ள ஏழா­வது மாடி வீட்­டில் நேற்று முன்­தி­னம் தீ வி­பத்து நிகழ்ந்­தது.

அந்த நாலறை வீட்­டி­லி­ருந்து குடி­யி­ருப்­பா­ளர்­க­ளைப் பாது­காப்­பாக வெளி­யேற்ற அண்­டை­வீட்­டார் இரு­வர் உத­வி­னர்.

அன்­றைய தினம் மாலை 5 மணி­ய­ள­வில் ஏற்­பட்ட தீ வி­பத்து கார­ண­மாக அந்த புளோக்­கில் இருந்து சுமார் 100 குடி­யி­ருப்­பாளர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர்.

தீ வி­பத்து நிகழ்ந்த வீட்­டி­ல் இ­ருந்து உறுப்­பி­னர்­களை வெளி­யேற்ற உத­வி­யர்­களில் திரு ஸு மிங் லின்­னும் ஒரு­வர். அந்த புளோக்­கில் 13வது மாடி வீட்­டில் வசிக்­கும் அவர், ஒன்­ப­தா­வது மாடி­யில் உள்ள தம் பெற்­றோர் வீட்­டில் இரவு உணவு அருந்­திக்­கொண்டு இருந்­தார். அப்­போது ஏதோ கரு­கிய வாடை வீசு­வ­தாக அவ­ரு­டைய மனைவி கூறி­ய­தைத் தொடர்ந்து, ஏழா­வது மாடி வீட்­டிற்கு திரு ஸு விரைந்­தார்.

அந்த வீட்­டிற்கு வெளியே இரு சிறு­வர்­கள் இருந்­த­தைக் கண்ட அவர், அந்த வீட்­டில் தீ வி­பத்து ஏற்­பட்­டதா என அவர்­க­ளி­டம் கேட்­டார். ஆனால், அச்­சி­று­வர்­க­ளி­டம் இருந்து பதில் எது­வும் வர­வில்லை.

அந்த வீட்­டி­லி­ருந்து கரும்­புகை வெளி­யே­றி­ய­தைக் கண்ட திரு ஸு, தாம் வீட்­டி­லி­ருந்து தீய­ணைப்­புக் கரு­வியை எடுக்க மேலே விரைந்­தார்.

ஏழா­வது மாடி வீட்­டிற்கு அவ­ச­ர­மாக கீழே இறங்­கிக்­கொண்டு இருந்­த­போது சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படையை அவர் அழைத்­தார். சம்­பவ இடத்­துக்கு வந்த தீய­ணைப்பு வீரர்­கள், தீ வி­பத்து ஏற்­பட்ட வீட்­டிற்கு அருகே வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­களை வெளி­யேற்­றி­னர்.

இந்­நி­லை­யில், எட்­டா­வது மாடி வீட்­டில் வசிக்­கும் டேமி­யன் லிம், 22, தீ வி­பத்து ஏற்­பட்ட வீட்­டி­லி­ருந்து மூன்று சிறு­வர்­க­ளை­யும் அவர்­க­ளு­டைய தாயா­ரை­யும் வெளி­யேற்ற உத­வி­னார். பின்­னர் தமது வீட்­டிற்­குத் திரும்­பிய அவர், தம்­மு­டைய பாட்­டியை வெளி­யேற்ற உத­வி­னார்.

நேற்­றுக் காலை, தீ விபத்து நிகழ்ந்த வீட்­டிற்கு ஏற்­பட்ட சேதத்­தைப் பார்­வை­யிட ஒரு தம்­ப­தி­ அதற்­குள் நுழைந்­த­னர்.

தீ ஏற்­பட்­ட­தற்­கான கார­ணம் குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தி­யாளர் விசா­ரித்­த­போது, மின்­சார விசை­யி­லி­ருந்து தீ பர­வத் தொடங்கி இருக்­க­லாம் என தாம் நம்­பு­வ­தாக அந்த மாது கூறி­னார்.

பின்­னர் அவரை அந்த ஆட­வர் அங்­கி­ருந்து நகர்த்­தி­ய­தைத் தொடர்ந்து, கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்க அவர்­கள் மறுத்­து­விட்­ட­னர்.

புகை­யைச் சுவா­சித்­த­தற்­காக சிறு­வர்­கள் மூவர் மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­துக்­காக வீட்டு உப­யோ­கப் பொருள்­கள் நன்­கொடை அளிக்­கப்­பட்­டு உள்­ள­தாக செம்­ப­வாங் குழுத்­தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் லிம் வீ கியாக் நேற்று கூறி­னார். சோஃபா, துணிச் சலவை இயந்­தி­ரம், துணி­ம­ணி­கள் உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.

தீ வி­பத்­துக்­கான கார­ணம் குறித்து விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தாக குடி­மைத் தற்­காப்­புப் படை­யும் காவல்­து­றை­யும் நேற்று தெரி­வித்­தன.