சாலை விபத்தில் உயிரிழந்த உணவு விநியோக ஊழியர்

சாலை விபத்தில் உயிரிழந்த உணவு விநியோக ஊழியர்

1 mins read
59f9616c-aac3-481a-acc2-f629ba4ba197
-

சுவா சூ காங் வட்­டா­ரத்­தில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்­தில் 28 வயது உணவு விநி­யோக ஊழி­யர் ஒரு­வர் மாண்­டார். அவர் ஓட்­டிச் சென்ற மின் சைக்­கிள் மீது கார் மோதி­யது. இந்த விபத்து புளோக் 130 சுவா சூ காங் அவென்யூ 1ல் நிகழ்ந்­தது.

கவ­ன­மின்றி வாக­னம் ஓட்டி மர­ணம் விளை­வித்­த­தற்­கா­க­வும் மது­பா­னம் அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டி­ய­தற்­கா­க­வும் பெண் ஒரு­வ­ரும் இரண்டு ஆட­வர்­களும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இரவு 11.25 மணி அள­வில் விபத்து குறித்து தக­வல் கிடைத்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. விபத்­துக்­குள்­ளான ஆட­வரை இங் டெங் ஃபோங் மருத்­து­வ­

ம­னைக்­குக் கொண்டு சென்­ற­போது அவர் சுய­நி­னை­வின்றி இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்­து குறித்து காவல்­

து­றை­யி­னர் விசா­ரணை நடத்­து­ கின்­ற­னர். அந்த உணவு விநி­யோக ஊழி­யர் சாலையில் சுய­நி­னை­வின்றி கிடப்­ப­தை­யும்

அவ­ரைச் சுற்றி பலர் நின்­று­

கொண்­டி­ருந்­த­தை­யும் காட்­டும் காணொளி ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது.

சுவா சூ காங் வட்டாரத்தில் உணவு விநியோக ஊழியர் ஓட்டிச் சென்ற மின்சைக்கிள் மீது கார் மோதியது. படுகாயம் அடைந்து சாலையில் சுயநினைவின்றி கிடந்த அந்த ஊழியருக்கு வழிப்போக்கர்கள் உதவினர்.

படம்: ஃபேஸ்புக்