பசுமைத் திட்டத்துக்கு உட்படும், சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாக விமானச் சேவைகளை மாற்ற அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தற்போது கனடாவின் மோன்ட்ரியோல் நகரில் நடைபெற்றுவரும் அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் பொதுக் கூட்டத்தில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஒப்பந்தங்களில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், அமெரிக்கப் போக்கு
வரத்து அமைச்சர் பீட் பட்டிகியேக், பிரிட்டிஷ் போக்குவரத்து அமைச்சர் ஆன்-மரி டிவேல்யனும் கையெழுத்திட்டனர். அமெரிக்காவுடன் சிங்கப்பூர் புரிந்துணர்வுக் குறிப்பில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டது. அதன்படி 'ஃபயோஃபீட்' மூலம் விமானங்களுக்குத் தேவையான எரிபொருளைத் தயாரிப்பது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
அதுமட்டுமல்லாது, நீடித்த நிலைத்தன்மைமிக்க திட்டத்துக்கும் ஏற்புடைய எரிபொருளைப் பயன்
படுத்தும் விமானங்களில் பயணம் செய்ய பயணிகள் ஊக்குவிக்கப்படுவர். இத்தகைய விமானங்கள் பயணம் செய்ய செலவு சற்று அதிகமாக இருக்கக்கூடும்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 15,000 கிலோமீட்டர் தூரத்தில் பசுமைப் பாதை ஒன்றும் அமைக்கப்படக்கூடும். இதுகுறித்து இருநாடுகளும் ஆய்வு நடத்தி வருகின்றன.

