நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கழிவறையை இளம் பெண் ஒருவர் பயன்படுத்திக்கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் ஆடவர் ஒருவர் அவரது குட்டைப் பாவடைக்குள் காணொளி எடுத்தார்.
ஆனால் இந்தக் குற்றத்தைப் புரிந்த பிறகு சீன நாட்டவரான 22 வயது சோ சிவெனுக்குக் குற்ற உணர்வு ஏற்பட்டது. அதனால் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்க கழிவறைக்கு வெளியே காத்திருந்தார். அதற்கு முன்பு அந்த முறையற்ற காணொளிப் பதிவுகளை அவர் நீக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியன்று நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது 20 வயதாகிறது.
அவர் கழிவறையைப் பயன்
படுத்திக்கொண்டிருந்தபோது தம்மைக் காணொளி எடுக்கப் பயன்
படுத்தப்பட்ட கைத்தொலைபேசி யைப் பார்த்து கத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்ததால் அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டதாகவும் நடந்ததைப் பற்றி சக மாணவர்களிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் பேராசிரியரிடம் தகவல் அளிக்கப்பட்ட பிறகு, வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. குற்றம் நிகழ்ந்த அதே நாளில் சோ கைது செய்யப்பட்டார். அவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதேபோன்ற
குற்றத்தை அவர் பலமுறை செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கட்டாய சிகிச்சை உத்தரவுக்கு சோ தகுதியானவரா என்பதை உறுதி செய்ய மாவட்ட நீதிபதி ஜான் இங் உத்தரவிட்டுள்ளார். கட்டாய சிகிச்சை உத்தரவுக்குத் தகுதி பெறுபவர்கள் சிறைத் தண்டனைக்குப் பதிலாக மனநல சிகிச்சை பெறுவர்.


