தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'எதிர்கால கொள்ளைநோய்க்கு உலகளாவிய சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்'

1 mins read
e7fa1da4-6384-48da-b81f-ff02bcdc5801
இந்தோனீசிய சுகாதார அமைச்சர் புடி குனாடி சடிகின் (இடம்), சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் இணைப் பேராசிரியர் கென்னத் மாக். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இரண்­டாம் போருக்­குப் பிறகு போரில் நாச­ம­டைந்த உலக நாடு­களை மீட்­டெ­டுக்­க­வும் எதிர்­கால நிதி நெருக்­க­டி­யி­லி­ருந்து பாது­காக்­க­வும் உல­கத் தலை­வர்­கள் ஒன்­றா­கச் சேர்ந்து உலக வங்கி, அனைத்­து­லக பண­ நி­தி­யத்தை உரு­வாக்­கி­னர்.

அது­போன்று இரண்டு ஆண்­டு­ க­ளாக கொள்­ளை­நோ­யால் பாதிக்­கப்­பட்ட பிறகு உல­க­ளா­விய சுகா­தா­ரக் கட்­ட­மைப்பை சீர­மைப்­பது குறித்து உலக மக்­கள் ஆராய்ந்து வரு­வ­தாக இந்­தோ­னீ­சிய சுகா­தார அமைச்­சர் புடி குனாடி சடி­கின் தெரி­வித்­தார்.

இதன் கார­ண­மா­கவே தமது நாடு தலைமை வகித்த ஜி20 மாநாட்­டில் சுகா­தா­ரத்­துக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்கப்­பட்­டது என்­றார் அவர்.

ஆர்ச்­சர்ட் ரோட்­டில் உள்ள ஷங்­ரிலா ஹோட்­ட­லில் நடை­பெற்ற ஆசிய நன்­கொடை உச்­ச­நிலை மாநாட்­டில் அவர், சிங்­கப்­பூ­ரின் மருத்­துவ சேவை­க­ளுக்­கான இயக்­கு­நர் கென்­னத் மாக்­குடன் சேர்ந்து பதி­ல­ளித்­தார்.

அப்­போது அடுத்த கொள்­ளை­நோய்க்கு முன்பே அதற்­கான நடை­முறைகள் நிர்­ண­யிக்­கப்­பட வேண்டும் என்று திரு புடி சொன்­னார். நிதி நெருக்­கடி ஏற்­பட்­டால் உலக வங்­கி­யும் அனைத்­து­லக பண நிதி­ய­மும் நட­வ­டிக்­கை­களை எடுக்க முன்­வ­ரு­வதை அவர் சுட்டிக்­ காட்­டி­னார். சுகா­தார நெருக்­க­டி­யின்­போது உலக சுகா­தார நிறு­வ­னம் தனது கொள்­கை­க­ளு­டன் உதவ முடி­யும். ஆனால் அது அதி­கம் செய்­யக்­கூ­டிய அள­வுக்கு போது­மான வளம் அத­னி­டம் இல்லை. தடுப்­பூசி மற்­றும் சிகிச்­சை­களை நாடு­களே கையாள வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

கொள்­ளை­நோய் சம­யத்­தில் நாடு­க­ளி­டையே தடுப்பு நட­வ­டிக்கை­ க­ளுக்­கான நடை­மு­றை­கள் ஒரே மாதிரி இருக்­க­வும் தக­வல்­களை பகிர்ந்­து­கொள்­ள­வும் முறை­யான கட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத் தினார்.