இணையம் வழி காதல் மோசடி, கடன், வங்கித் தகவல்கள், இணைய வர்த்தகத் தகவல்கள், இவற்றுடன் அரசாங்க அதிகாரிகள் போலவும் சீன அதிகாரிகள் போலவும் நடித்து ஏமாற்று வேலைகளில் ஈடுபடும் மோசடிகள் ஆகியவை தொடர்பாக சிங்கப்பூரில் 312 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சந்தேக நபர்கள் $15.7மில் லியன் பெறுமானமுள்ள 1,175 மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று நம்பப்படுகிறது.
சந்தேக நபர்கள் அனைவரும் 17 முதல் 68 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று காவல்துறையினர் கூறினர்.
செப்டம்பர் 16 தேதியிலிருந்து 29ஆம் தேதிவரை வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகளும் காவல் துறையினரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் சந்தேக நபர்கள் பிடிபட்டதாக கூறப்
படுகிறது.
ஏமாற்றுக் குற்றம், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றம் அல்லது உரிமம் இல்லாமல் கட்டணச் சேவை வழங்கிய குற்றங்களுக்காக இவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தக் குற்றச்செயல்களுக்கு துணை போகாமல் இருக்க பொதுமக்கள் மற்றவர் தங்கள் வங்கிக் கணக்குகள், கைத்தொலைபேசிகள் போன்றவற்றை பயன்படுத்த விடுக்கும் கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று காவல் துறையினர் வலியுறுத்துகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை ஏற்று செயல்பட்டு பின்னர் அவை குற்றச்செயல்களுடன் தொடர்புடையவை எனக் கண்டறியும் பட்சத்தில் அவர்களும் குற்றங்களுக்கு துணைபோனதாக கருதப்படும் என்று காவல் துறையினர் விளக்கினர்.
இவ்வாண்டு முதல் பாதியில் 14,349 மோசடிக் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாக காவல் துறையினர் கூறினர்.
மேலும், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் கிடைத்த 7,746 புகார்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு புகார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்கு என்றும் அவர்கள் சுட்டுகின்றனர்.
இவ்வாண்டு முதல் பாதியில் மோசடிகளில் $346.5 மி. அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முழு
வதற்கும் மோசடிகளில் ஏற்பட்ட இழப்பு $633.3 மில்லியனாக இருக் கிறது. இவ்வாண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட இழப்பு சென்ற ஆண்டு முழுவதும் ஏற்பட்ட இழப்பில் பாதிக்கும் மேல் என்பதை காவல் துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஏமாற்றுக் குற்றம் ஒவ்வொன்றுக்கும் 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றம் ஒவ்வொன்றுக்கும் 10 ஆண்டு வரையிலபான சிறை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். உரிமம் இல்லாத கட்டண சேவை வழங்குபவருக்கு எதிராக $125,000 வரை அபராதம், 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை ஆகியன விதிக்கப்படலாம்.

