சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகப் புரளி கிளப்பியதாகக் கைது செய்யப்பட்ட 37 வயது ஆடவர்மீது நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. பீதியைக் கிளப்பியதாகவும் விமான ஊழியருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகவும் லா ஏன்டி ஹியென் என்னும் அந்த அமெரிக்கர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய எஸ்கியூ 33 என்னும் விமானத்தில் அவர் பயணம் செய்தார். அந்த விமானத்தில் மொத்தம் 208 பயணிகள் இருந்தனர். சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.26 மணிக்கு அந்த விமானம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து புறப்பட்டது. சிங்கப்பூர் வந்து சேருவதற்கு ஆறு மணி நேரம் முன்னதாக லா தமது கைப்பையில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவித்தார். அவரது மனநிலையைப் பரிசோதிக்க மனநலக் கழகத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
விமானத்தில் வெடிகுண்டு புரளி: அமெரிக்கர்மீது குற்றச்சாட்டு
1 mins read
-

