தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$722,000 ஜிஎஸ்டி மோசடி: குற்றக் கும்பலைச் சேர்ந்தவருக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனை

2 mins read
cba6b78d-ab6e-45ec-8b9c-e0c83b1560a3
-

பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) மோச­டித் திட்­டத்­து­டன் தொடர்­பு­டைய குற்­றக் கும்­ப­லைச் சேர்ந்த ஆட­வர் ஒரு­வ­ருக்கு நேற்று மூவாண்­டுச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த 2015 பிப்­ர­வரி முதல் 2016 ஜன­வரி வரை 'நாகூர் டிரே­டிங்' என்ற செயல்­படா நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ராக இருந்­தார் லீ சொங் ஹூங், 42. அக்­கா­ல­கட்­டத்­தில், அவ­ரும் கும்­ப­லின் மற்ற உறுப்­பி­னர்­களும் சேர்ந்து $56.5 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான விற்­பனை தொடர்­பில் குறைந்­தது 183 விலைப்­பட்­டி­யல்­க­ளைப் போலி­யாகத் தயா­ரித்­த­னர்.

நாகூர் டிரே­டிங் நிறு­வ­னத்­தின் விலைப்­பட்­டி­யல்­க­ளி­லும் மற்ற ஆவ­ணங்­க­ளி­லும் மேலெ­ழுதி, கையொப்­ப­மி­டும் பணி­யும் லீக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த மோச­டியில் தமது பங்­க­ளிப்­பிற்­காக அவர் குறைந்­தது $80,000 பெற்­றார்.

உண்­மை­யில் எவ்­வித வணிக நட­வ­டிக்­கை­யும் இடம்­பெ­றா­மல், போலிப் பரி­வர்த்­த­னை­க­ளுக்­காக பொய்­யான விலைப்­பட்­டி­யல்­க­ளைத் தயா­ரிப்­ப­தற்­கா­கவே நாகூர் டிரே­டிங் நிறு­வ­னம் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் காவல்­து­றை­யும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் தெரி­வித்­தன.

உள்­ளூர் விநி­யோ­கிப்­பா­ளர்­ க­ளுக்­குப் பணம் கொடுத்து, பொருள்­களை வாங்கி அவற்றை மற்ற நிறு­வ­னங்­க­ளி­டம் விற்­ற­தா­கக் காட்­டும் வகை­யில் அந்­தப் போலி விலைப்­பட்­டி­யல்­கள் தயா­ரிக்­கப்­பட்­டன.

அந்த இடை நிறு­வ­னங்­களும் இந்த மோச­டி­யில் பங்­கு­கொண்­டன. உண்­மை­யில் எந்த வணி­க­மும் இடம்­பெ­றாத நிலை­யில், அவை போலி­யாக விலைப்­பட்­டி­யல்­களை உரு­வாக்­கின.

பின்­னர், 'இல்­லாத' பொருள்­களை வாங்­கும்­படி ஏற்­று­ம­தி­யா­ளர்­களை அந்­தக் குற்­றல் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் தொடர்­பு­கொண்­ட­னர். அப்­பொ­ருள்­களை வெளி­நாட்­டில் வாங்­கு­வ­தற்­கும் ஆளை ஏற்­பாடு செய்­து­விட்­ட­தாக அவர்­கள் கூறி­னர்.

அத­னை­ய­டுத்து, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் அந்த இடை நிறு­வ­னங்­க­ளுக்கு ஜிஎஸ்­டி­யு­டன் கூடிய தொகை­யைச் செலுத்­தி­னர். உண்­மை­யில் அவை போலிப் பரி­வர்த்­த­னை­கள் என்­பதை அறி­யாத ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், பின்­னர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தி­டம் ஜிஎஸ்­டி­யைத் திரும்­பத் தரக் கோரி விண்­ணப்­பித்­த­னர்.

இப்­படி $114 மில்­லி­யன் மதிப்­பிற்­குக் 'கற்­ப­னை­யான' விற்­பனை இடம்­பெற்­ற­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இந்த மோச­டித் திட்­டம் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் $722,189 தொகையை ஏற்­று­மதி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கி­விட்­டது.