பணிப்பெண்களுக்கு மாதம் ஒரு நாள் கட்டாய விடுப்பு

பணிப்பெண்களுக்கு மாதம் ஒரு நாள் கட்டாய விடுப்பு

2 mins read
c7a5c3b7-4e71-4f7b-96a5-b5ff7685fb60
-

அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி முதல் எல்லா முத­லா­ளி­களும் தங்­கள் இல்­லப் பணிப்­பெண்­களுக்கு மாதம் ஒரு நாள் கட்­டாய விடுப்பு கொடுக்க வேண்­டும் என்­றும் அந்த விடுப்பு நாளுக்கு ஈடாக ரொக்­கம் கொடுக்­கப்­ப­டக்­கூ­டாது என்­றும் மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அந்த ஓய்­வு­நாளை வாரத்­தில் எந்த நாளி­லும் எடுக்­க­லாம். அது ஒரு முழு நாளாக அல்­லது இரு அரை நாளா­க­வும் எடுக்­க­லாம்.

இவ்­வாண்டு ஜூலை­யில் முதன் முத­லாக இது குறித்து அறி­விக்­கப்­பட்­டது.

இதன் மூலம் இல்­லப் பணிப்­பெண்­கள் வேலை­யி­லி­ருந்து ஓய்வு எடுத்­துக்­கொள்­ள­வும் வீட்­டுக்கு வெளியே தங்­கள் தொடர்பை வலுப்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் முடி­யும்.

இல்­லப் பணிப்­பெண்­க­ளின் நல்­வாழ்வை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு இந்த முறை ஆத­ர­வ­ளிக்­கும் என்­றும் புத்­து­ணர்ச்சி பெறும் பணிப்­பெண்­கள் பதி­லுக்­குத் தங்­கள் முத­லா­ளி­க­ளுக்கு சிறந்த ஆத­ரவை அளிக்க முடி­யும் என்­றார் மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியோ ஹுவாங்.

"எந்த நாளில் ஓய்வு எடுத்­துக்­கொள்­ள­லாம் என்று பணிப்­பெண்­களுக்­கும் அவர்­க­ளின் முத­லா­ளி­களுக்­கும் இடையே பரஸ்­பர கருத்­தி­ணக்­கம் ஏற்­பட வேண்­டும்," என்­றும் திரு­வாட்டி கான் கூறி­னார்.

தங்­கள் ஓய்­வு­நா­ளில் பணிப்­பெண்­கள் வீட்­டிலேயே இருக்க முடி­வெ­டுக்­க­லாம். அந்த ஓய்­வு­நாள் ஒரு மாதத்­துக்­குள்­ளாக எடுக்­கப்­பட வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

தங்­கள் பணிப்­பெண்­ணின் ஓய்வுநா­ளில், முத­லா­ளி­கள் மாற்று ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்ள, அமைச்சு முத­லா­ளி­க­ளுக்­கென ஒரு வழி­காட்­டிப் புத்­த­கத்தை உரு­வாக்கி உள்­ளது.

அந்த வழி­காட்­டிப் புத்­த­கத்­தில் மூத்­தோர் உள்ள வீடு­களில் அவர்­களைப் பகல்­நேர பரா­மரிப்பு நிலை யத்தில் சேர்க்­கும் நட­வ­டிக்­கை­யும் அடங்­கும். மேலும் தனிப்­பட்ட இல்ல பரா­ம­ரிப்பு சேவை­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

அந்த சேவையை வழங்­கும் ஊழி­யர்­கள் மூத்­தோ­ரைக் குளிப்­பாட்­டு­தல், கழி­வ­றைக்­குச் செல்­லு­தல் போன்ற அன்­றாட சேவை­க­ளி­லும் உத­வு­வார்­கள்.

ஓய்­வு­நா­ளில் பணிப்­பெண்­கள், அவர்­க­ளுக்­காக அரசு சார்­பற்ற அமைப்­பான அய்தா வழங்­கும் நிதி அறி­வாற்­றல் வகுப்­பு­களில் சேர்ந்து­கொள்­ள­லாம் என்­றும் வழி­காட்­டிப் புத்­த­கம் யோசனை தெரி­விக்­கிறது.

'ஃபாஸ்ட்' எனப்­படும் வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­ணுக்­கான சமூக ஆத­ரவு மற்­றும் பயிற்சி நிலையம் அளிக்­கும் மன­வு­றுதிப் பயி­ல­ரங்­கு­க­ளி­லும் பணிப்­பெண்­கள் பங்­கேற்­க­லாம்.

மனிதவள அமைச்சின் இல்லப் பணிப்பெண்கள் மின்­சே­வை­கள் இணை­ய­வாசல் மூலம் தங்­கள் பணிப்­பெண்­ணின் ஓய்­வு­நாள் பற்றி முத­லா­ளி­கள் தெரி­விக்க வேண்­டும் என்­ப­தை­யும் அமைச்சு நினை­வூட்­டி­யது.

இந்த முறையை வர­வேற்ற இல்லப் பணிப்பெண்கள் நிலை­யத்­தின் தலை­வர் இயோ குவாட் குவாங், "மனி­த­வள அமைச்­சு­டன் தமது நிலை­யம் இணைந்து புதிய நடைமுறை தொடர்­பில் முத­லா­ளி­க­ளுக்­கும் பணிப்­பெண்­க­ளுக்­கும் உள்ள அக்­க­றை­க­ளுக்­குத் தீர்வு காணும்," என்று கூறி­னார்.