$85,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்

$85,000 மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்

1 mins read
320307e1-4c4a-4d68-bb6a-a368eea645f8
இம்மாதம் 6,7ஆம் தேதிகளில் ஆறு பேரிடமிருந்து மொத்தம் $85,000 மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -
multi-img1 of 2

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் போதைப்­பொ­ருள் தொடர்­பான குற்­றங்­களில் ஈடு­பட்ட சந்­தே­கத்­தின்­பே­ரில் ஆறு பேரைக் கைது செய்­துள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­ட­ம் இ­ருந்து இரண்டு கிலோ­கி­ரா­முக்­கு அதி­க­மான கஞ்­சா­வும் சிறிய அள­வு­களில் இதர போதைப்­பொ­ருள்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டு உள்ளன.

ஆறு பேரிடமும் கைப்பற்றப்பட்ட போதைப்­பொருள்­களின் மொத்த மதிப்பு 85,000 வெள்ளி என்று கூறப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் மாலை சிம்ஸ் ஈஸ்ட் அவென்­யூ­வில் 41 கிராம் கஞ்சா வைத்­தி­ருந்த 26 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.

பின்­னர் அவ­ரது வாக­னத்­தி­ல் இ­ருந்து மேலும் 2.24 கிலோ­கி­ராம் கஞ்­சா­வும் 10 'எல்­எஸ்டி' போதைப்­பொ­ருள் தட­வப்­பட்ட முத்­திரை வில்­லை­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

சிங்­கப்­பூர் சட்­டத்­தின்­கீழ் 500 கிரா­முக்­கு அதி­க­மான கஞ்­சா­வைக் கடத்­திய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் மரணதண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

நேற்­றுக் காலை நடத்­தப்­பட்ட மற்­றொரு சோதனை நட­வ­டிக்­கை­யில், ஹெண்­டர்­சன் ரோட்­டில் உள்ள தொழில்­து­றைக் கட்­ட­டத்­தில் 104 கிராம் கெட்­ட­மின் போதைப்­பொ­ருள் பிடி­பட்­டது.

இதன் தொடர்­பில் அங்­கி­ருந்த நான்கு ஆட­வர்­களும் ஒரு பெண்­ணும் கைது செய்­யப்­பட்­ட­னர். இவர்­கள் 27 வய­துக்­கும் 33 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

கெட்­ட­மின் போதைப்­பொ­ரு­ளைக் கடத்­திய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் 20 ஆண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யு­டன் 15 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.