தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முஸ்லிம் சமூகத்திற்குச் சேவை: விருது, சிறப்பிப்பு

1 mins read
69e32084-0551-465e-a01c-8b6a2850bb35
இஸ்தானாவில் நேற்று நடந்த விழாவில், அதிபர் ஹலிமா யாக்கோப் பிடம் விருது பெறும் திரு கோதரி ஷா இபுறாஹிம் (இடது). வலது படம் திரு முஹம்­மது இல்யாஸ். நிகழ்ச்சியில் முஸ்லிம் விவகாரங் களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் திரு மசகோஸ் ஸுல்கிஃப்லியும் கலந்துகொண்டு சிறப்பித்தார். படங்கள்: முயிஸ் -
multi-img1 of 2

பொன்­மணி உத­ய­கு­மார்

முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றத்­தின் 45வது விருது வழங்­கும் விழா நேற்று நடந்­தது. சிங்­கப்­பூர் முஸ்­லிம் சமூ­கத்­திற்கு 12 ஆண்டுகளுக்­கும் மேலாக சேவை­யாற்­றி­யோ­ரில் ஒரு­வ­ருக்கு 'ஜாசா செமர்­லாங்' எனும் மெச்­சத்­தக்க சேவை விரு­தும் எட்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக சேவை­யாற்­றி­யோ­ரில் எட்டு பேருக்கு 'ஜாசா பக்தி' எனும் நீண்ட­கால சேவை விரு­தும் வழங்கி சிறப்­பிக்­கப்­பட்­டது.

'ஜாசா பக்தி' விருதை பெற்ற எட்டு பேரில், கோதரி ஷா இபுறா­ஹிம், 60, தன் சேவை இளை­யர்­களை சமூக சேவை­யில் ஈடு­பட ஊக்­கு­விக்­கும் என நம்­பு­கி­றார். தன்­னால் முடிந்­த­வரை மற்­ற­வர்­களுக்கு உதவ வேண்­டும் என்று எண்­ணும் இவர் 30 ஆண்­டு­க­ளாக சமூக சேவை­யில் ஈடு­பட்­டுள்­ளார்.

திரு முஹம்­மது இல்யாஸ், 55, 'ஜாசா பக்தி' விருதை பெற்­ற­வர்­களில் மற்­றொ­ரு­வர். பென்­கூ­லன் பள்­ளி­வா­ச­லின் மறு­சீ­ர­மைப்பு பணி களில் முனைப்­பு­டன் ஈடுபட்டவர்.

ஆண்­டு­தோ­றும் நடக்­கும் இவ்­வி­ருது விழா சென்ற ஆண்டு கொவிட்-19 தொற்­றால் இணை­யம் வழி நடந்த நிலை­யில், இவ்­வாண்­டின் விழா­விற்கு கடந்த ஆண்டு விருது பெற்­ற­வர்­க­ளை­யும் இஸ்­தானா­விற்கு அதி­பர் ஹலிமா யாக்கோப் அழைத்­தி­ருந்­தார்.