குடிநுழைவு சோதனையில் மின்தடை; பயணிகள் அவதி

1 mins read
c008e919-f2d3-4d3e-9829-a4872f12e3bb
மின்தடையால் அதிகாலை ஒரு மணியளவில் குடிநுழைவு சோதனைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்கு உள்ளாயினர். படம்: ஃபேஸ்புக்/ ஃபட்ஸ்லான் டெர்மிஸி -

மின்­சா­ரக் கோளாறு கார­ண­மாக உட்­லண்ட்ஸ் குடி­நு­ழைவு சோத­னைச் சாவ­டி­யில் ஞாயிறு காலை பாது­காப்­புச் சோதனை பல மணி நேரம் நிறுத்­தப்­பட்­டது.

பரா­ம­ரிப்­புப் பணி­யின்­போது மின் உற்­பத்தி இயந்­தி­ரம் ஒன்று செயல்­ப­ட­வில்லை.

பரா­ம­ரிப்­புக்­காக பிர­தான மின் விநி­யோ­கம் நிறுத்தி வைக்­கப் ­ப­டும்­போது மின் உற்­பத்தி இயந்­தி­ரம் இயக்­கப்படு­வது வழக்­கம். ஆனால் அது செயல்­ப­டா­த­தால் ஞாயிறு காலை குடி­நு­ழைவு சோத­னை­கள் பாதிக்­கப்­பட்­டன.

முன்­ன­தாக அந்த இயந்­தி­ரம் சோதிக்­கப்­பட்டு தயார்நிலை­யில் இருந்­த­தாக குடிநுழைவு சோத­னைச் சாவடி ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

பரா­ம­ரிப்­புப் பணி நேற்று முன்­தி­னம் இரவு 11.40 மணிக்­குத் தொடங்­கப்­பட்­டது. 12.20 மணி­அ­ள­வில் மின் உற்­பத்தி இயந்­தி­ரம் செயல்­ப­ட­வில்லை.

இந்த நிலை­யில் துவாஸ் சோத­னைச் சாவ­டிக்கு பய­ணி­கள் திருப்­பி­வி­டப்­பட்­ட­னர்.

கடற்­பா­லத்­தில் இருந்த வாக­னங்­கள் மற்­றும் பய­ணி­கள் பழைய உட்­லண்ட்ஸ் குடி­நு­ழைவு சாவ­டிக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

அதி­காலை 4.00 மணி­ய­ள­வில் மின்­வி­நி­யோ­கம் வழக்க நிலைக்­குத் திரும்­பி­யது. இதை­ய­டுத்து படிப்­ப­டி­யாக குடி­நு­ழைவு சோத­னை­கள் தொடங்கி 6.25 மணி­அள­வில் வழக்­க­நி­லையை அடைந்­தது. பய­ணி­க­ளுக்கு ஏற்­பட்ட இடை­யூ­று­க­ளுக்கு வருத்­தம் தெரி­வித்த ஆணை­யம், பொறுமை காத்து, ஒத்­து­ழைப்பு வழங்­கிய பய­ணி­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்கொண்­டது.