மலேசியாவிலிருந்து பிராய்லர் உயிர்க் கோழிகள் இவ்வார இறுதிக்குள் வரலாம்

மலேசியாவிலிருந்து பிராய்லர் உயிர்க் கோழிகள் இவ்வார இறுதிக்குள் வரலாம்

1 mins read
9c311cc2-18fe-476d-984d-5c4dac3c5a72
-

மலே­சி­யா­வி­லி­ருந்து பிராய்லர் உயிர்க் கோழி­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரர்­கள் இவ்­வார இறு­தி­வரை காத்­தி­ருக்க நேர­லாம். கோழி ஏற்­று­மதி தடை இன்று நீக்­கப்­ப­டு­கிறது என்று நேற்று முன்­தி­னம் மலே­சிய அமைப்­பு­கள் அறி­வித்­தன.

ஆனால், அந்­தக் கோழி­கள் இவ்­வார இறு­தி­யில்­தான் இங்கு வந்து சேரும் என்று உள்­ளூர் கோழி இறக்­கு­ம­தி­யா­ளர் எதிர்­பார்க்­கின்­ற­னர். இது குறித்து நேற்று பேசிய மலே­சி­யா­வின் வேளாண், உண­வுத் துறை அமைச்­சர் ரோனல்ட் கியான்ட், கோழி ஏற்­று­மதி தற்­போ­தைக்­குப் பாதி­யா­கக் குறைக்­கப்­படும் என்­றும் படிப்­ப­டி­யாக அந்த விகி­தம் உயர்த்­தப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.

ஏற்­று­மதி தடைக்கு முன் மாதத்­துக்கு 3.6 மில்­லி­யன் கோழி­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டன என்­றும் தற்­போ­தைய தடைக்­குப் பிறகு 1.8 மில்­லி­யன் கோழி­கள் மட்டுமே ஏற்று­மதி செய்­யப்­படுவ­தற்கு அனு­மதி வழங்­கப்­படும் என்று அமைச்­சர் கியான்ட் கூறி­ய­தாக பெர்­னாமா செய்தி வெளி­யிட்­டது.