அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'எனக்ஸோ பயோஎனர்ஜி' மற்றும் 'ட்ரையா' எனும் இரு புதிய நிறுவனங்கள் விரைவில் சேட்ஸ் (Sats) நிறுவனத்தின் விமானத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவுக் கழிவுகளை மாற்று சக்தியாக உருவாக்கும்.
இந்த இரு நிறுவனங்கள், ஓசிபிசி வங்கி ஏற்பாடு செய்த முதலாவது நீடித்த நிலைத்தன்மை போட்டியில் வெற்றி பெற்றன. அது அந்த வங்கியின் வாடிக்கையாளரான சேட்ஸ் நிறுவனத்தின் உணவு மற்றும் பொட்டலமிடுதல் கழிவுகளை நிர்வகிக்கும்.
'ட்ரையா' நிறுவனம் தாவர அடிப்படையிலான பொருளைக் கொண்டு உணவுப் பெட்டிகளை உருவாக்கும். அவற்றைப் பயன்படுத்தி, வீசியவுடன் அவை சிறு துண்டுகளாக உடைக்கப்பட்டு உரம் மற்றும் உயிர் எரிபொருளாக மாற்றப்படுகிறது.
ஓசிபிசி வங்கி இந்நிறுவனங்கள் இரண்டுக்கும் தங்கள் திட்டத்தை மேற்கொள்ள தலா $80,000 நிதியை வழங்கும்.
2023 நான்காம் காலாண்டுக்குள் 'எனக்ஸோ பயோஎனர்ஜி' நிறுவனம் சாங்கி விமான நிலைய வளாகத்தில் தனது பணிகளைத் தொடங்கும். அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் சேட்ஸ் நிறுவன உணவுத் தயாரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறினார் அந்நிறுவனத் தலைமை நிர்வாகி லீ ஜெஸ்டிங்ஸ்.