தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூன்றரை மணி நேரமாக மின்தூக்கியில் சிக்கித் தவித்த குடும்பம்

2 mins read
6f7636ab-8864-4aee-aef6-08bd542a05a3
யுஓபி பிளாசாவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

ராஃபிள்ஸ் பிளேஸ் யுஓபி பிளா­சா­வில் உள்ள ஒரு மின்­தூக்­கி­யி­னுள் மூன்று மணி நேரத்­திற்­கும் மேலாக சிக்­கித் தவித்த சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­தது.

அன்று மாலை 6.30 மணி­ய­ள­வில் அக்­கட்­ட­டத்­தின் 60வது மாடி­யில் இருந்த சி சுவான் டோ ஹுவா உண­வ­கத்­திற்­குத் தம் மனைவி, மக­ளு­டன் செல்­வ­தற்­காக அங்­கு உள்ள ஒரு மின்­தூக்­கி­யில் ஏறி­னார் 74 வய­தான திரு சியா.

திடீ­ரென நான்­கா­வது தளத்­தில் நின்­று­போன அந்த மின்­தூக்கி, பின்­னர் வேக­மாக இரு தளங்­கள் கீழி­றங்கி இரண்­டாம் தளத்­தில் நின்­று­விட்­டது.

இத­னை­ய­டுத்து, உத­வி­கோரி பல­முறை அபா­ய­ம­ணியை அழுத்­தி­னார் ஓய்­வு­பெற்ற சொத்­துச் சந்தை மேம்­பாட்­டா­ள­ரான திரு சியா. எந்­தப் பதி­லும் கிட்­டாது போகவே, அம்­மின்­தூக்­கி­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த தொலை­பேசி எண்ணை அவர் தொடர்­பு­கொண்­டார்.

பழு­து­பார்ப்­புத் தொழில்­நுட்­பர்­இருவர் வந்­தும் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண முடி­ய­வில்லை.

அதன்­பின், இரவு 7.30 மணி­ய­ள­வில் காவல்­து­றை­யைத் தொடர்­பு­கொண்­டார் திரு சியா.

சில நிமி­டங்­களில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் அங்கு வந்­து­சேர்ந்­த­னர். மின்­தூக்கி­யின் பக்­க­வாட்­டுக் கதவை அவர்­கள் திறக்க முயன்­ற­னர். ஆனா­லும், அது முடி­யா­மல் போனது.

பின்­னர் மின்­தூக்­கி­யின் மேல் இருக்கும் கத­வைத் திறந்து, அதன்­வ­ழி­யாக திரு சியா­வும் அவ­ரின் குடும்­பத்­தி­ன­ரும் இன்­னொரு மின்­தூக்­கிக்கு வர குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் உத­வி­னர்.

கிட்­டத்­தட்ட மூன்­றரை மணி நேரத்­திற்­குப் பிறகு, அதா­வது 10 மணிக்கு அவர்­கள் வெளியே வந்­தனர். சம்­ப­வத்­திற்­கா­கக் கட்­டட மேலா­ளர் தங்­க­ளி­டம் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­ட­தாக திரு சியா சொன்னார்.

அவசர மருத்துவ வாகனம் ஒன்றும் அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.