ரசாயன, கதிரியக்க அச்சுறுத்தல்கள் பற்றி விவாதிக்க மாநாடு: நூற்றுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் சிங்கப்பூர் வருகை

ரசாயன, கதிரியக்க அச்சுறுத்தல்கள் பற்றி விவாதிக்க மாநாடு: நூற்றுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் சிங்கப்பூர் வருகை

2 mins read
0a133484-5f94-432a-8dcf-a8c616a7a4d3
-

'சிபி­ஆர்' எனப்­படும் ரசா­ய­னம், நோய்த்­தொற்று, கதி­ரி­யக்­கம் ஆகி­ய­வற்­றின் அச்­சு­றுத்­தல் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளைக் கலந்து ஆலோ­சிக்க மாநாடு ஒன்­றுக்கு சிங்­கப்­பூர் ஏற்­பாடு செய்­துள்­ளது.

'ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­க­ளின் சந்­திப்­பு­ட­னான சிபி­ஆர்' என்­னும் மாநாட்­டின் தொடக்க நிகழ்­வில் 100க்கும் மேற்­பட்ட அனைத்­து­லக நிபு­ணர்­கள் கலந்து­ கொண்­ட­னர்.

இது­போன்ற அச்­சு­றுத்­தல்­

க­ளைக் கண்­ட­றி­வது பற்­றி­யும் புதிய தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­

ப­டுத்தி அச்­சு­றுத்­தல்­களை முறி­ய­டிப்­பது பற்­றி­யும் நிபு­ணர்­கள் விவா­திப்­பர்.

ஷாங்­ரிலா ஹோட்­ட­லில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த இரு­நாள் மாநாடு நேற்று தொடங்­கி­யது. எந்த ஓர் அர­சாங்­கத்­தை­யும் சாராத அமைப்­பு­க­ளால் உண்­டாக்­கப்­படும் சிபி­ஆர் அச்­சு­றுத்­தல்

­க­ளைக் கையாள்­வ­தில் இந்த வட்­டா­ரத்­தின் ஒற்­று­மை­யைப் பலப்

­ப­டுத்­தும் நோக்­கில் மாநாடு நடத்­தப்­ப­டு­கிறது.

தொடக்க நிகழ்­வில் உரை­யாற்­றிய தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஹெங் சீ ஹாவ், பலர் உயி­ரி­ழக்­கக்­கூ­டிய பெரி­ய­தொரு சிபி­ஆர் தாக்­கு­தல்­களை அதிர்ஷ்­ட­வ­ச­மாக இந்த வட்­டா­ரம் இது­வரை சந்­தித்­தி­ரா­விட்­டா­லும் அது­தொ­டர்­பான அச்­சு­றுத்­தல் இன்­னும் உள்­ளது என்­றார்.

இந்த வட்­டா­ரத்­தில் உள்­ளவை உள்­ளிட்ட பயங்­க­ர­வாத அமைப்­பு­கள் சிபி­ஆர் நச்­சுப்­பொ­ருள்­

க­ளைப் பயன்­ப­டுத்­து­வது பற்றி ஏற்­கெ­னவே பரி­சீ­லித்து உள்­ள­னர் என்று அவர் கூறி­னார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அப்­ரின் நச்சு ரசா­ய­னத்­தால் கூடிய வெடி­பொ­ருள்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் ஐஎஸ்­ஐ­எஸ் குழு­வின் முயற்­சி­களை இந்­தோ­னீ­சியா முறி­ய­டித்­துள்­ள­தாக திரு ஹெங் குறிப்­பிட்­டார். சிபி­ஆர் அச்­சு­றுத்­தல் என்­பது எல்­லை­தாண்டிய ஒன்று என்­ப­தால் இதனை எந்த ஒரு நாடும் தனி­யா­கக் கையாள முடி­யாது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"பெரி­ய­தொரு சிபி­ஆர் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல் இந்த வட்­டா­ரத்­தில் நிகழ்ந்­து­வி­டுமோ என்­பதே நமது அச்­ச­மாக உள்­ளது.

"இது தொடர்­பான சம்­ப­வங்­களை விசா­ரித்து தீர்வு காண்

­ப­தில் ராணு­வத்­திற்­கும் தற்­காப்­புத்­துறை விஞ்­ஞா­னி­க­ளுக்­கும் முக்­கிய பங்கு உள்­ளது," என்­றார் திரு ஹெங்.