கொண்டோமினியம் ஒன்றில் தம்முடன் வேலை பார்த்த 16 வயது சிறுமியை அப்போது அங்கு பாதுகாவல் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்த ஆடவர் மானபங்கம் செய்தார்.
இதனால் அந்த 58 வயது ஆடவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட்து.
இந்தக் குற்றத்தை அவர் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று புரிந்தார்.
பாதுகாவல் அதிகாரிகளுக்கான கூடத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அச்சிறுமி எதிர்ப்பு தெரிவித்தும் அவரை அந்த ஆடவர் மானபங்கம் செய்தார். பிறகு அச்சிறுமியிடம் $100 கொடுத்து தம்முடன் முறையற்ற செயலில் ஈடுபடச் சொன்னார். அதற்கு அச்சிறுமி மறுத்துவிட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைக் காக்க அந்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த கொண்டோமினியத்தில் தற்காலிகப் பாதுகாவல் அதிகாரி களாகப் பணியாற்ற அச்சிறுமியையும் சிறுமியின் தாயாருடைய இரண்டாவது கணவரையும் அந்த ஆடவர் வேலையில் சேர்த்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

