'தொழில்நுட்பரின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்'

'தொழில்நுட்பரின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்'

1 mins read
a22ce299-2f2e-4978-85d0-f8bf78284780
-

பேருந்து ஒன்­றைத் தொழில்­நுட்­பர் ஒரு­வர் பழு­து­பார்த்­துக்­கொண்­டு இ­ருந்­த­போது அதே பேருந்து அவர் தலை மீது விழுந்­தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதி­யன்று நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வத்­தில் மலே­சி­ய­ரான 43 வயது தின் சூன் ஃபாட்டின் மண்டை ஓடு உடைந்தது. இதன் விளை­வாக அவர் மர­ணம் அடைந்­தார்.

இந்­நி­லை­யில், பேருந்­தைப் பழுது­ பார்க்க சரி­யான கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தால் தின்­னின் மர­ணம் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று மரண விசா­ரணை அதி­காரி ஆதம் நகோடா தெரி­வித்­தார். திரு தின்­னின் மர­ணம் வேலை­யு­டன் தொடர்­பு­டைய அசம்­பா­வி­தம் என்­றார் அவர்.

திரு தின், 2014ஆம் ஆண்­டி­ல்­இருந்து ஸ்ட்­ராய்ட்ஸ் ஆட்­டோ­மோட்­டிவ் சர்­வீ­சஸ் நிறு­வ­னத்­தில் ஊழி­ய­ராக இருந்­த­வர். இந்த நிறு­வ­னத்­தின் பழைய பெயர் எஸ்­எம்­ஆர்டி ஆட்­டோ­மோட்­டிவ் சர்­வீ­சஸ் ஆகும். அந்த நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான 26 பேருந்­து­க­ளை­யும் சிறு மின்­சார வாக­னங்­க­ளை­யும் பரா­ம­ரிக்­கும் குழு­வுக்கு திரு தின் தலை­வ­ராக இருந்­தார். கன­ரக வாக­னங்­க­ளைப் பழு­து­பார்க்­கும்­போது சரி­யான கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்தவேண்டும் என்று திரு ஆதம் நகோடா வலியுறுத்தினார்.