முனையம் 2ன் புறப்பாட்டுப் பகுதி மீண்டும் திறப்பு; பயணிகளுக்குத் காத்திருந்த இன்ப அதிர்ச்சி

முனையம் 2ன் புறப்பாட்டுப் பகுதி மீண்டும் திறப்பு; பயணிகளுக்குத் காத்திருந்த இன்ப அதிர்ச்சி

3 mins read
ac1de50b-70c0-4734-bc1c-24e0d6eb21b9
சாங்கி விமான நிலையத்தின் விமான வடிவிலான சின்னமான மேக்சுடன் பயணிகள் குடும்பமாக நின்று மகிழ்ச்சியுடன் படம் எடுத்துக்கொண்டனர். முனை­யம் 2 கையா­ளும் வரு­டாந்­திர பயணிகள் எண்­ணிக்­கை 23 மில்­லி­ய­னி­லி­ருந்து 28 மில்­லி­ய­னுக்கு உயரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி விமான நிலை­யத்­தின் முனை­யம் 2ல் உள்ள பய­ணி­கள் புறப்­பாட்டுப் பகுதி புதுப்­பிக்­கப்­பட்டு நேற்று மீண்­டும் இயங்­கத் தொடங்­கி­யது.

நேற்று அங்கு சென்ற பய­ணி­

க­ளுக்கு இன்ப அதிர்ச்சி காத்­

தி­ருந்­தது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­நா­டு­ க­ளுக்­குப் புறப்­பட்­டுச் செல்ல அதி­காலை 5 மணிக்­கெல்­லாம் முனை­யம் 2ல் இருந்த பய­ணி­களை நீலம், வெள்ளை, தங்க நிற பலூன்­க­ளால் வடி­வ­மைக்­கப்­பட்ட வாயில் வளைவு வர­வேற்­றது.

ஆங்­காங்கே அமைக்­கப்­பட்­டு இருந்த சிறு கூடங்­க­ளி­லி­ருந்து இல­வச காப்­பி­யும் நொறுக்­குத் தீனி­களும் வழங்­கப்­பட்­டன.

சாங்கி விமான நிலை­யத்­தின் விமான வடி­வி­லான சின்­ன­மான மேக்­சு­டன் பய­ணி­கள் குடும்­ப­மாக நின்று மகிழ்ச்­சி­யு­டன் படம்

எடுத்­துக்­கொண்­ட­னர்.

அங்­கி­ருந்த சிறு­வர்­கள் கவ­னிக்­கா­த­போது அவர்­க­ளது பய­ணப் பெட்­டி­களை மேக்ஸ் எடுத்­துக்­கொண்டு குறும்­புத்­த­னம் செய்து அனை­வ­ரை­யும் சிரிக்க வைத்­தது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மா­கப் பய­ணி­கள் எண்­ணிக்கை வெகு­வா­கச் சரிந்­ததை அடுத்து 2020ஆம் ஆண்டு மே மாதத்­தில் முனை­யம் 2 மற்­றும் முனை­யம் 4ல் சேவை­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்­டன.

தற்­போது சாங்கி விமான நிலை­யத்­தின் அனைத்து முனை­யங்­களும் இயங்­கு­கின்­றன.

சாங்கி விமான நிலை­யம் கையா­ளும் வரு­டாந்­திர பய­ணி­கள் எண்­ணிக்கை கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு இருந்த நிலை­யைப் போல ஏறத்­தாழ 70 மில்­லி­

ய­னுக்­குத் திரும்­பி­யுள்­ளது.

முனை­யம் 4 கடந்த செப்­டம்­பர் மாதம் மீண்­டும் திறக்­கப்­பட்­டது. முனை­யம் 2ல் உள்ள பய­ணி­கள் வர­வேற்­புப் பகுதி கடந்த மே மாதம் மீண்­டும் தொடங்­கி­யது.

ஆண்­டி­று­தி­யில் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை வெகு­வாக உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் இந்த முனை­யங்­கள் மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்­ளன.

முன்­னு­ரைக்­கப்­பட்ட எண்­ணிக்­கை­யை­விட பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

ஹாங்­காங், ஜப்­பான், தைவான் போன்ற நாடு­கள் தங்­கள் எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யி­ருப்

­ப­தும் அதற்கு முக்­கிய கார­ணம்.

நேற்று முனை­யம் 2 மீண்­டும் திறக்­கப்­பட்­டதை அடுத்து இரண்டு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னங்­கள் கோலா­லம்­பூ­ருக்­கும் பேங்­காக்­கிற்­கும் புறப்­பட்­டுச் சென்­றன.

முனை­யம் 2லிருந்து நேற்று மொத்­தம் 17 சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னங்­கள் புறப்­பட்­டுச் சென்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

முனை­யம் 2ல் நேற்று மொத்­தம் 25 கடை­கள் திறக்­கப்­பட்­டன.

பய­ணி­க­ளுக்­கான இடங்­களில் புதுப்­பிக்­கப்­பட்ட கடை­க­ளுக்­குச் சென்று பார்க்க மிகுந்த ஆவ­லு­டன் இருப்­ப­தாக வர்த்­தக ஆலோ­ச­க­ரான 39 வயது குரு­ராஜா கூறி­னார்.

வேலை அனு­மதி அட்டைதாரரான திரு குரு­ராஜா தமது மனைவி, இரண்டு மகள்­க­ளு­டன் அடிக்­கடி தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கிற்­குப் பய­ணம் மேற்­கொள்­ப­வர்.

"முனை­யம் 2ல் உள்ள அனைத்து அம்­சங்­களும் பார்ப்­ப­தற்கு மிக அழ­காக இருக்­கின்­றன. இது எனது பயண அனு­ப­வத்தை மேலும் மெரு­கூட்­டு­கிறது," என்­றார் அவர்.

முனை­யம் 2ன் வடக்­குப் பகு­தி ­யில் புதுப்­பிப்­புப் பணி­கள் இன்­னும் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. அவை 2024ஆம் ஆண்­டுக்­குள் நிறை­வ­டை­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. முனை­யம் 2 கையா­ளும் வரு­டாந்­திர பயணிகள் எண்­ணிக்­கை 23 மில்­லி­ய­னி­லி­ருந்து 28 மில்­லி­ய­னுக்கு உயரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"கடந்த இரண்டு ஆண்­டு­

க­ளாக சாங்கி விமான நிலை­யம் பல சவால்­களை எதிர்­நோக்­கி­யது. எனவே, தற்­போது கூடு­தல் பய­ணி­களை வர­வேற்­ப­தில் மகிழ்ச்சி அடை­கி­றோம்.

"மீள்­தி­ற­னு­டன் செயல்­பட்ட விமான நிலைய ஊழி­யர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்," என்று சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தின் விமான நிலைய நிர்­வா­கப் பிரி­வின் நிர்­வாக உத­வித் தலை­வர் திரு டான் லாய் டெக் தெரி­வித்­தார்.