அமைச்சை ஏமாற்றினார்; ஆடவருக்கு 19 வாரம் சிறைவாசம்

அமைச்சை ஏமாற்றினார்; ஆடவருக்கு 19 வாரம் சிறைவாசம்

1 mins read
d6411727-2eec-4475-8307-3dc07fb56126
ஹுவாங் வெய்மிங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தன்­னு­டைய தாய்க்­கும் மனை­விக்கும் கொவிட்-19 ஆத­ரவு மானி யம் கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக அந்த இரண்டு பேரின் வேலை பற்றி பொய் சொல்லி சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சை ஒரு­வர் ஏமாற்­றி­னார்.

இப்­படி ஏமாற்றி அவர், மொத்­தம் $4,800 பெற்­றார். இந்­தக் குற்­றத்­திற்­காக ஹுவாங் வெய்­மிங், 38, என்ற அந்த ஆட­வ­ருக்கு 19 வார சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஏமாற்­றி­யது, ஏமாற்ற முயன்­றது தொடர்­பி­லான மூன்று குற்­றங்­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

அந்த ஆட­வர், தில்­லு­முல்­லு­கள் இடம்­பெற்­றி­ருந்த விண்­ணப்­பங்­களைத் தாக்­கல் செய்­தார் என்­பது தெரி­ய­வந்­ததை அடுத்து சென்ற ஆண்டு மார்ச் 4ஆம் தேதி அது பற்றி காவல்­து­றை­யி­டம் அமைச்சு புகார் செய்­தது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக பொரு­ளி­யல், சமூ­கப் பாதிப்பு­களுக்கு உள்­ளான சிங்­கப்­பூர்­வாசி­களுக்கு உத­வு­வ­தற்­காக கொவிட்-19 ஆத­ரவு மானி­யத் திட்­டம் நடப்­புக்கு வந்­தது.

2020 ஜன­வரி 23க்குப் பிறகு ஒரு­வ­ருக்கு ஆட்­கு­றைப்பு மூலம் அல்­லது உடன்­பாடு முடி­வ­டைந்­தது மூலம் வேலை போய் இருந்­தால் அவர் மானி­யத்­தைப் பெறலாம்.