வெளிநாட்டு ஊழியர் ஒருவர் சாயம் பூசிக்கொண்டிருந்தபோது சற்று நேரம் ஓய்வு எடுப்பதற்காக புகைபிடித்தார். அதுவே அவருக்கு வில்லங்கமாக முடிந்துவிட்டது.
அவர் வைத்திருந்தது கள்ள சிகரெட்டு என்பதை சுங்கச்சாவடி அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து அந்த 33 வயது பங்ளாதேஷ் நாட்டவருக்கு $500 அபராதம் விதிக்கப்பட்டது.
ஊழியரின் ஒரு மாதச் சம்பளத்திற்கு இந்த அபராதத் தொகை ஈடானது எனக் கூறப்பட்டது.
வரி செலுத்தப்பட்ட சிகரெட்டு பாக்கெட்டுக்குள் ஊழியர் தனது கள்ள சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சைனாடவுன், கேலாங் உட்பட பல்வேறு பகுதிகளில் சுங்கச்சாவடித் துறை மேற்கொண்ட அமலாக்கச் சோதனைகளில் மொத்தம் 33 ஆடவர்கள் சிக்கினர். இவர்களில் வெளிநாட்டவர் 24 பேர்.

