ஜோகூர் பாலத்தில் பல லாரிகளும் குறைந்து இரண்டு வாகனங்களும் நேற்று விபத்தில் சிக்கின.
அதனால் சுமார் இரண்டு மணிநேரத்துக்கு ஜோகூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய வாகனங்களில் ஒன்று மோசமாக சேத மடைந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இரண்டு லாரிகளுக்கிடையே வாகனம் சிக்கிக்கொண்டிருப்பதைப் புகைப்படம் காட்டியது.
மேலும் ஒரு வாகனமும் சேதமடைந்தாகக் கூறப்பட்டது. இதனால் ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் வழியில் போக்குவரத்து தாமதமடைந்தது.
விபத்தால் மூன்று தடங்களில் இரண்டு மூடப்பட்டதாக குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று காலை 9.45 மணியளவில் தெரிவித்தது. உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூர் வருவோருக்குத் தாமதம் ஏற்படும் என்றும் அது எச்சரித்தது.
விபத்துக்கு உள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டதாக ஆணையம் காலை 11 மணிக்குத் தெரிவித்தது. போக்குவரத்து வழக்கநிலைக்கு திரும்பியதாக பின்னர் அது கூறியது.

