ஊடகம் உள்ளிட்ட பல தொழில்களுக்கு ஆபத்து

ஊடகம் உள்ளிட்ட பல தொழில்களுக்கு ஆபத்து

2 mins read
d2e6a15e-3816-47e4-a4c7-de8086ea54dc
எஸ்ஜி கற்றல் விழாவில் இயந்திர மனிதர்களையும் தானியக்க சாதனங்களையும் பார்வையிட்ட அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: லியான்ஹ சாவ்பாவ் -

தானியக்கம், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிக்கிறது

செயற்கை நுண்­ண­றிவு, தானி­யக்கப் பயன்­பாடு நாளுக்கு நாள் அதி­க­ரித்து அதன் ஆதிக்­கத்­தால் தக­வல் தொடர்பு துறை­யில் 13 விழுக்­காடு தொழில்­க­ளுக்கு ஆபத்து ஏற்­படும்.

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்­டு­களில் உள்­கட்­ட­மைப்பு பொறி­யி­ய­லா­ளர்­கள், மின்னி­லக்கச் சொத்து முக­வர்­கள், ஊடக நடத்து­ நர்­கள் உள்­ளிட்­டோ­ருக்கு வேலை இல்­லா­மல் போய்­வி­டும் என்று நேற்று வெளி­யிட்ட ஆய்வு­ ஒன்று தெரி­விக்­கிறது.

அதே சம­யத்­தில் மென்­பொ­ருள் பொறி­யா­ளர்­கள், மேகக் கணினி கட்­ட­மைப்பு, தர­வுப் பகுப்­பா­ளர்­கள் ஆகி­யோ­ருக்கு தேவை இருக்­கும். இத­னால் சிங்­கப்­பூ­ரில் உள்ள தக­வல் ­தொ­டர்பு துறை ஊழி­யர் அணி­யின் திறன்­களை மேம்­ப­டுத்த வேண்­டி­ய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் இந்த ஆய்வு, இத்­து­றை­யின் வேலை உரு­மாற்ற வழிகாட்டி திட்டமாக (Job Trans formation Map) அமைகிறது.

இதனை வெளி­யிட்­டுப் பேசிய தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, பாதிக்­கப்­படும் ஊழி­யர்­க­ளுக்கு வேலையை மறு­வ­டி ­வ­மைக்க முத­லா­ளி­க­ளுக்கு இந்தத் திட்டம் வழி­காட்­டும் என்­றார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கத்­தில் நடை­பெற்ற 5ஜி கற்­றல் விழா­வில் கலந்­து­கொண்ட அவர், உரு­மா­றும் அல்­லது மாற்­ற­ம­டை­யும் வேலை­க­ளைப் பெறத் தேவை­யான பயிற்­சி­களை முத­லா­ளி­கள் வழங்கு ­வார்­கள் என்­று கூறினார்.

"மூன்று முக்­கிய முன்­னு­ரி­மை­கள் உள்­ளன. ஒட்­டு­மொத்த ஊழி­யர் அணி­யை­யும் மின்­னி­லக்­கத் திறன்­க­ளு­டன் மேம்­ப­டுத்­து­தல், தக­வல் மற்­றும் தொடர்பு ஊழி­யர் அணி போட்­டித்­தன்­மை­யு­டன் இருக்க உத­வு­வது, தொழில்­து­றை­யின் ஆத­ர­வு­டன் திறனை மேம் படுத்­தும் முயற்­சி­களை அதி­க­ரிப்­பது," என்று அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ குறிப்­பிட்­டார்.

'ஜேடி­எம்' வழிகாட்டித் திட்டம், பாதிக்­கப்­படும் வேலை­களை அடை­யா­ளம் காட்­டு­கிறது.

முற்­றி­லும் மாறு­பட்ட வேலை­ க­ளாக இருக்­க­லாம் அல்­லது மற்ற வேலை­க­ளு­டன் இணைக்கப்­ப­ட­லாம். குறைந்த மாற்­றங்­க­ளு­டன் சில வேலை­கள் ஓரளவு பாதிக்­கப்­ப­ட­லாம்.

தக­வல்­தொ­டர்பு துறை­யில் உள்­கட்­ட­மைப்பு பொறி­யி­ய­லா­ளர்­கள், தரக்­கட்­டுப்­பாட்டு பொறி­யா­ளர்­கள் போன்­றோர் மேகக்கணினி, செயற்கை நுண்­ண­றிவு போன்ற தொழில்­நுட்­பங்­க­ளால் பாதிக்­கப் ­ப­டு­வார்­கள்.

இத்­த­கைய பணி­கள் சேவை­கள் வழங்­கும் வெளி­நி­று­வ­னங்­களிடம் ஒப்படைக்கப்படலாம். தொழில்­நுட்­பத்­தால் தானி­யக்­க­ம­ய­மாக்­கப்­ப­ட­லாம் அல்­லது பிற பணி­க­ளின்­கீழ் கொண்டு வரப்­ப­ட­லாம் என ஆய்வு தெரி­விக்­கிறது.

இதே போன்ற போக்­கு­கள் கார­ண­மாக தரவு நிர்­வாக மேலா­ளர்­கள், பொருள் தயா­ரிப்பு மேலா­ளர்­கள் மத்திமமான பாதிப்­பு­களை எதிர்­நோக்­கு­வார்­கள் என்று ஆய்வு மேலும் தெரிவித்தது.