'தற்­காப்பு அறி­வி­யல் நிறு­வ­னம் இப்போது மிக முக்கியம்'

'தற்­காப்பு அறி­வி­யல் நிறு­வ­னம் இப்போது மிக முக்கியம்'

1 mins read
884561f3-1f6a-4a2d-98cb-c9f6e6b7368e
-

டிஎஸ்ஓ எனப்­படும் தற்­காப்பு அறி­வி­யல் நிறு­வ­னத்­தின் இலக்கு இன்­ன­மும் மாற்­ற­ம­டை­யா­மல் அப்­படியே இருந்து வரு­கிறது. அது முன்பு எப்­போ­தை­யும்­விட இப்­போது அதிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தாக இருக்­கிறது என்று பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிறு­வ­னம் மின்­னணு பரி­சோ­தனை நிலை­யம் என்ற பெய­ரில் 1972ல் அமைக்­கப்­பட்­டது.

டாக்­டர் கோ கெங் சுவீ போன்ற முன்­னோ­டித் தலை­வர்­கள் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யைத் தோற்­று­வித்­த­போது முழு தொழில்­நுட்­பத்­தை­யும் பயன்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டிய அவ­சி­யத்தை உணர்ந்­தி­ருந்­த­னர்.

என்­றா­லும் சில நேரங்­களில் சிங்­கப்­பூ­ருக்கு மிக முக்­கி­ய­மான தொழில்­நுட்­பங்­கள் கிடைக்­கா­மல் போனதை அடுத்து மின்­ன­ணுப் பரி­சோ­தனை நிலை­யத்தை அமைக்க முடிவு எடுக்­கப்­பட்­டது.

டிஎஸ்ஓ என்று குறிப்­பி­டப்­படும் அந்­தப் பிரி­வின் 50வது ஆண்­டைக் குறிக்­கும் வகையில் நேற்று ஷங்ரிலா ஹோட்­ட­லில் நடந்த விருந்­தில் பிர­த­மர் லீ கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

வர்த்­தக ரீதி­யில் பல தற்­காப்பு தொழில்­நுட்­பங்­கள் கிடைக்­கின்­றன என்­றா­லும் ரக­சி­யங்­களை ரக­சி­ய­மாக பாது­காக்­கும் நோக்­கத்­து­டன் அவற்றைக் கொள்­மு­தல் செய்ய வேண்­டாம் என்று சிங்­கப்­பூர் முடி­வெ­டுத்­தது.

ரக­சிய அடிப்­ப­டை­யி­லான தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்கி அவற்றை சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­களுக்கு வழங்கி சிங்­கப்­பூ­ரின் இறை­யாண்­மை­யை­யும் பாது­காப்பை­யும் உறு­திப்­ப­டுத்த உத­வு­வது டிஎஸ்­ஓ­வின் இலக்கு என்று பிர­த­மர் குறிப்­பிட்­டார்.