$14.9 மி. மோசடி, 1,002 மோசடிச் செயல்கள், 339 பேர் மீது விசாரணை

$14.9 மி. மோசடி, 1,002 மோசடிச் செயல்கள், 339 பேர் மீது விசாரணை

1 mins read
7cd8079b-0d76-4f0d-a5ba-5f4dc8b5bf62
-

மோசடி அல்­லது சட்­ட­வி­ரோ­த­மா­கப் பணத்­தைக் கைமாற்­றிய செயல்­களில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 339 பேர் மீது விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது. அவர்­கள் 1,002க்கும் அதி­க­மான மோச­டிச் செயல்­களில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது என்று காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

சந்­தேக நபர்­களில் 227 பேர் ஆண்­கள், 112 பேர் பெண்­கள். 15லிருந்து 73 வய­துக்கு உட்­பட்ட அவர்­கள் விசா­ர­ணையில் உதவி வரு­கின்­ற­னர்.

வர்த்­தக விவ­கா­ரப் பிரிவு, ஏழு காவல்­துறை பிரி­வு­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் சென்ற மாதம் 30ஆம் தேதி­யி­லி­ருந்து இம்­மா­தம் 13ஆம் தேதி­வரை தீவெங்­கும் சோத­னை­கள் மேற்­கொண்­ட­தில் சந்­தேக நபர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர். வேலை மோசடி, கடன் மோசடி, இணை­யக் காதல் மோசடி, அர­சாங்க அல்­லது சீனா­வைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளைப் போல் நடித்து மேற்­கொள்­ளப்­படும் மோசடி உள்­ளிட்­ட­வற்­றில் அவர்­கள் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. பாதிக்­கப்­பட்­டோர் 14.9 மில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகை­யைப் பறி­கொ­டுத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஏமாற்­றி­யது, கள்­ளப் பணத்தை நல்­லப் பண­மாக்­கு­வது போன்­ற­வற்­றின் தொடர்­பில் சந்­தேக நபர்­கள் மீது விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.