திருவாட்டி ஃபெலிசியா டியோவும் அவரது இரண்டு நண்பர்களும் எக்ஸ்டசி உண்ட போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் மரணமடைந்த ஃபெலி சியா டியோவின் உடலை நண்பர்கள் எடுத்துச் சென்று சட்டவிரோதமாக எரித்து மறைத்துவிட்டனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் நண்பர்களில் ஒருவரான அஹமட் டேனியல் முஹமட் ரஃபிக்கு, 37, நேற்று 26 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தன் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அஹமட்டும் அவருடன் இந்தோனீசியாவைச் சேர்ந்த ரகில் புத்ரா செடியா சுக்மாராஜனாவும் ஃபெலிசியாவின் உடலை ஒரு பெட்டியில் அடைத்து பொங்கோல் பாதை 24க்கு எடுத்துச் சென்றனர். அங்கு பள்ளம் தோண்டிய இருவரும் பெட்டியைப் போட்டு எரித்து மூடிவிட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இந்தோனீசியர் இன்னமும் தேடப்பட்டு வருகிறார்.
பொது இடங்களில் சட்டவிரோதமாக உடலை எரித்தது, நேர்மையற்ற முறையில் அவரது பொருள்களைக் கையாடியது, இரு காவல்துறை அதிகாரிகளிடம் பொய் சாட்சியங்களைக் கூறியது, பொய் சாட்சியங்களை உருவாக்கியது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகள் அஹமட் மீது கொண்டு வரப்பட்டது. தவறான தகவல்களை வழங்கியது, அரசு அதிகாரிகளிடம் தக வல்களை மறைத்தது ஆகிய இதர இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
அஹமட்டுக்கு 26 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும் அவர் விரைவில் விடு விக்கப்டுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2020 டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து அவர் சிறையில் இருந்து வருகிறார்.
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அவர் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தி லிருந்து தொடங்குவதால் 26 மாதச் சிறைத் தண்டனை முடியும் தறு வாயில் உள்ளது. இதன் காரணமாக அவர் விரைவில் விடுவிக்க வாய்ப்பு உள்ளது. 2007 ஜூன் 30ஆம் தேதி விடியற்காலையில் அப்போது 22 வயதான அஹமட், இந்தோனீ சியரான, அப்போது 18 வயதான ரகில் புத்ரா, திருவாட்டி டியோ, அப்போது அவரது வயது 19, ஆகிய மூவரும் தாங்கள் படித்த லசால்லில் விருந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ரகில் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பினர்.
வீட்டில் மூவரும் எக்ஸ்டசி போதை மாத்திரையை எடுத்துக் கொண்டதாக அஹமட் தெரிவித்து உள்ளார். அதிகாலை 6.00 மணி யளவில் காரணம் தெரியாமலே ஃபெலிசியா இறந்துவிட்டார். அதன் பிறகு ஃபெலிசியாவின் உடலை எடுத்துச் சென்று இருவரும் எரித்து விட்டனர்.

