அதிகரித்து வரும் கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக இங்குள்ள மருத்துவமனைகளில் 800க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் முக்கியமற்ற அறுவை சிகிச்சைகளும் ஒத்திவைக்கப்படும். சுகாதார அமைச்சு இந்தத் தகவல்களை இன்று (அக்டோபர் 15) அறிவித்தது.
அண்மைய காலமாக ஒமிக்ரான் திரிபுவின் 'எக்ஸ்பிபி' (XBB) கருமி பரவி வருகிறது. அதனால் சமூகத்தில் கொவிட்-19 எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்துள்ளது.