கொவிட்-19 நோய்க்கிருமியின் அடுத்த பரிணாமமான 'எக்ஸ்பிபி' (XBB) திரிபு நோய்ப்பரவல் அதிகரித்துவரும் வேளையில் அதனுடன் வாழ்வதற்குப் பழகிக்கொள்ள சுகாதார அமைச்சர் நான்கு முக்கிய வழிகாட்டிகளைக் குறிப்பிட்டார்.
1. அண்மைய தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொள்ளுதல்
50 வயதுக்கு மேற்பட்ட, மூன்று தடுப்பூசிகள் போட்டுக்கொண்டோர் அல்லது கடைசியாக ஐந்து மாதங்களுக்கு முன்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மொடர்னாவின் இரு திறன் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
2. பாதுகாப்பு இடைவெளி நவடிக்கைகள் மீண்டும் நடப்புக்கு வரலாம்
உள்புறங்களில் முகக்கவசங்கள் அணிவது போன்ற பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் மீண்டும் நடப்புக்கு வரலாம்.
3. மருத்துவமனையில் கட்டுப்பாடுகள்
மருத்துவமனைகளில் வருகையாளர்களுக்குக் கட்டுப்பாடுகள் நேற்று(அக்டோபர் 14) முதல் நடப்புக்கு வந்தன.
4. தனிப்பட்ட பாதுகாப்பு
தனிப்பட்ட சுய பாதுகாப்பு அவசியம். நோய்வாய்ப்பட்டால் மருத்துவரைச் சென்று பார்ப்பது, முகக்கவசம் அணிவது போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.