வருமுன் தடுப்போம்; நலமுடன் அதிக ஆயுளுடன் வாழ்வோம்

வருமுன் தடுப்போம்; நலமுடன் அதிக ஆயுளுடன் வாழ்வோம்

4 mins read
6b8a1e7a-90fe-436b-9109-cded82549cbf
-

முரசொலி

கொவிட்-19 கிருமி உல­கத்­தில் ஏற்­ப­டுத்­திய பாதிப்பு­கள் கொஞ்­ச­நஞ்­ச­மல்ல. பொரு­ளி­யல் பாதிப்­பு­கள் சமூகப் பாதிப்­பு­கள் ஒரு பக்­கம் இருக்க, உலக மக்­க­ளின் ஆயு­ளையே அது குறைத்­து­விட்­டது.

இரண்­டா­வது உல­கப் போருக்­குப் பிறகு தனித்த ஓராண்­டில் இட­ம்பெற்ற அள­வுக்­குப் பல நாடு­களில் மக்­க­ளின் ஆயுட்­கா­லம் இப்­போது குறைந்து இருக்கிறது. இதற்கு கொரோனா கிரு­மி­தான் கார­ணம் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது. மொத்­தம் 29 நாடு­களை உள்­ள­டக்கி 2020ஆம் ஆண்­டில் ஓர் ஆய்வு நடத்­தப்­பட்­டது.

அவற்­றில் 27 நாடு­களில் மக்­க­ளின் ஆயு­ளைக் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு கொரோனா சாப்­பிட்­டு­விட்­டது. இதை­விட மோச­மாக, 22 நாடு­களில் மக்­க­ளின் ஆயுட்­கா­லம் அரை ஆண்­டுக்­கும் மேலாக குறைந்துவிட்­ட­தாக அந்த ஆய்வு தெரி­விப்­ப­தைப் பார்த்­தால் அதிர்ச்­சி­யா­கத்­தான் இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரை­யும் கொரோனா விட்டுவைக்­க­வில்லை. கிரு­மி­யைத் துடைத்து ஒழிக்க, பர­வு­வதைத் தடுக்க உல­கம் பாராட்­டும் அள­வுக்கு உட­னுக்­கு­டன் பல நட­வ­டிக்­கை­களை சிங்­கப்­பூர் எடுத்து வந்த போதி­லும் அந்­தக் கிருமி சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஆயு­ளில் கைவைத்­து­விட்­டது.

மக்­க­ளின் ஆயுள் 10 வாரங்­கள் குறைந்­தி­ருக்­கிறது. பல நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கை­யில் சிங்­கப்­பூ­ரில் இது மிக மிகக் குறை­வு­தான். இருந்­தா­லும் 60 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு ஆயுள் குறைந்­தி­ருக்­கிறது என்­ப­து­தான் கவ­னிக்­கத்­தக்­க­தாக இருக்­கிறது.

இத்­த­கைய புள்­ளி­வி­வரங்­கள் கிடை­க்கத் தொடங்கி 60 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் ஆகிறது. இது­வரை சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஆயுள் குறைந்ததாக சரித்­தி­ரம் இல்லை. கொரோனா அந்த வரலாற்றையே மாற்­றி­விட்­டது. இதில் சார்ஸ் போன்ற முந்­திய தொற்­று­களை எல்­லாம் கொரோனா பின்னுக்குத் தள்ளிவிட்­டது.

சிங்­கப்­பூரர்­கள் உல­கி­லேயே ஆக அதிக ஆயுளைக் கொண்­ட­வர்­கள். அவர்­களின் ஆயுள் கொரோ­னா­வுக்கு முன்­ன­தாக 2019ஆம் ஆண்­டில் 83.7 ஆண்­டு­க­ளாக இருந்­தது. அது, சென்ற ஆண்டில் 83.5 ஆண்­டு­க­ளா­கக் குறைந்­து­விட்­டது. கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்ட கூடு­தல் மர­ணங்­களே இதற்­குக் கார­ணம் என்று ஆகப் புதிய மக்கள்­ தொகை போக்கு அறிக்கை தெரி­விக்­கிறது.

கிருமி தொற்­றத் தொடங்­கி­யது முதல் பல்­வேறு கார­ணங்­க­ளால் இடம்­பெற்ற மர­ணங்­க­ளுக்­கும் கொரோனா இல்லை எனில் ஏற்­பட்டு இருக்­கக்­கூடிய மர­ணங்­க­ளுக்­கும் இடைப்­பட்ட வேறு­பாடுதான் கூடு­தல் மர­ணங்­கள் என்று குறிப்­பி­டப்­ப­டு­கின்றன.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்­டில் இடம்­பெற்ற மரணங்களுக்­கான மிக முக்­கி­ய­மான கார­ணங்­களைப் பார்க்­கும்­போது கொரோனா ஐந்­தா­வது இடத்­தில் இருந்­தது.

மர­ணம் அடைந்த சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வாசி­களில் கொரோனா கார­ண­மாக ஏற்­பட்ட மர­ணங்கள் 3.5% ஆக இருந்­தன. கொவிட்-19 ஆயுளைக் குறைத்து இருக்­கிறது. மர­ண­ம­டைந்த 200 பேரில் ஏழு பேர் அந்­தக் கிருமி கார­ண­மாக மாண்டுள்ளனர்.

அதேவேளை­யில், மர­ணங்­க­ளுக்­கான இதர முக்கி­ய­மான கார­ணங்­களை நாம் அலட்­சி­ய­ப்படுத்தி­வி­டக்கூடாது என்­பது இன்­னும் முக்­கி­ய­மான ஒன்று. புற்­று­நோய், இதய நோய்­கள், சளிக்­காய்ச்­சல், வாதம் தொடர்­பான நோய்­கள் மர­ணங்­க­ளுக்­கான முதல் நான்கு கார­ணங்­க­ளாக உள்­ளன.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை ஆண்­க­ளை­விட பெண்­கள் அதிக காலம் வாழ்­கி­றார்­கள். இந்த நில­வ­ரத்­தில் கொரோனா கைவைக்க இய­ல­வில்லை.

இதற்­குக் கார­ணம் ஆண்­க­ளை­விட பெண்­கள் உடல் நல­னில் அதிக அக்­கறை காட்­டு­ப­வர்­க­ளாக இருப்­ப­து­தான். புகைப்­பது, குடிப்­பது போன்ற உடல் நல­னுக்­குப் பாத­க­மான செயல்­களில் ஆண்­கள் அதி­கம் ஈடு­ப­டு­வ­துண்டு.

இது ஒரு­பு­றம் இருக்க, சுகா­தா­ரப் ப­ரி­சோ­தனை­களைச் செய்து கொள்­வ­தில் அலட்­சி­ய­மாக இருப்­பதும் ஆண்­க­ளி­டம் அதி­கம் காணப்­ப­டக்­கூ­டிய ஒரு போக்­காக உள்­ளது.

கொரோனா கிரு­மி­யின் தாக்­கம் கார­ண­மாக ஆயுள் குறைந்­தி­ருப்­பது ஒரு­பு­றம் இருக்க, நீண்ட காலப்போக்­கில் மேலும் என்ன என்ன பாதிப்­பு­கள், விளை­வு­கள், தாக்­கங்­கள் ஏற்­ப­டுமோ என்­பது இப்­போ­தைக்­குத் தெளி­வு­பட தெரி­ய­வில்லை.

கொரோனா கிருமி இன்னமும் ஒழிந்தபாடும் இல்லை. இத்தகைய ஒரு சூழலில் சிங்கப்பூரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கையில், நோயை வருமுன் காக்கும் அணுகு முறையை அவர்கள் கடைப்பிடிக்கவேண்டியது மிகவும் இன்றியமையாத ஒன்றாகத் தெரிகிறது.

இதில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி' இயக்கம் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம்.

தேசிய அள­வில் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்ற உடல் நலப் பரி­சோ­த­னை­களைச் சிங்­கப்­பூ­ரர்­கள் இல­வ­ச­மாக செய்­து­கொள்ள அந்­தத் திட்­டம் உத­வும்.

நாள்­பட்ட நோய்­க­ளுக்­குச் சிகிச்சை பெற மெடிசேவ் எனப்­படும் மருத்­துவ சேமிப்­புக் கணக்கை முழு­வ­து­மாகப் பயன்­ப­டுத்­திக் கொள்ள அத்­திட்­டம் வழிவகுக்­கும்.

அதோடு மட்­டு­மல்ல, உடல்­நல­மிக்க வாழ்க்­கை­பா­ணியை மக்­கள் மேற்­கொள்ள அந்­தத் திட்­டம் வெகு­ம­தி­யை­யும் அளிக்­கும். வாய்க்குச் சுவையாக இருக்­கும் என்­ப­தால் உண­வில் அதிக உப்­பைச் சேர்த்­துக்­கொள்­ளும் பழக்­கம் பல­ரி­டம் உண்டு.

அளவுக்கு அதிக உப்பு, உட­லில் இரத்த அழுத்தம் அதி­க­மா­வது, மாரடைப்பு, வாதம் போன்ற நோய்­களுக்கு வழிவகுத்து­வி­டும். ஆகை­யால் உண­வில் உப்­பைக் குறைக்க ஒரு­மித்த அள­வில் முயற்­சி­கள் இடம்­பெ­ற அத்­திட்­டம் உறுதுணை­யாக இருக்­கும்.

கொரோனா போன்ற அப்­போ­தைக்கு அப்­போது தலை­காட்­டக்­கூ­டிய கிரு­மித்­தொற்று கார­ண­மாக மக்­க­ளின் உடல்­ந­ல­னில், ஆயு­ளில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­கள் இருக்­கவே செய்­யும். அவற்­றைத் தவிர்த்­துக்கொள்­ள­வேண்­டி­யது கட்­டா­ய­மா­னது.

அதே நேரத்­தில், தனிப்­பட்­ட­வர்­களும் சமூ­க­மும் அதிக ஆயு­ளு­டன், நல்ல உடல் நல­னு­டன் இருந்து வரு­வது என்­பது ஒவ்­வொ­ரு­வ­ரின் தனிப்­பட்ட முயற்சி யையும் சமூகத்­தின் ஒட்­டு­மொத்த முயற்­சி­யை­யும் சார்ந்து இருக்­கும் என்­பதைச் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

இதைச் சாதிக்க மக்­கள் நல்ல பழக்­க­வ­ழங்­கங்­களை நிரந்­த­ர­மாக ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். உடல் நல­னுக்கு ஏற்ற உணவு, உடற்­ப­யிற்­சி தேவை.

இவற்­றோடு அர­சாங்­கம் நடை­மு­றைப்­ப­டுத்­தும் திட்­டங்களைத் திறம்­பட பயன்­ப­டுத்­திக்கொண்டு சிங்கப்பூரர்கள் நோய் வருமுன் காக்கும் அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இது விரும்பிய பலன்களைத் தரும் என்பது உறுதி.