கொவிட்-19 சிகிச்சைக்காக 800 படுக்கைகள் தயாராகும்

கொவிட்-19 சிகிச்சைக்காக 800 படுக்கைகள் தயாராகும்

2 mins read
48da14f3-5484-45db-af64-50c5e5fd4f92
-

சிங்­கப்­பூ­ரில் 'எக்ஸ்­பிபி' என்ற ஓமிக்­ரான் உரு­மா­றிய கிருமி கார­ண­மாக கொவிட்-19 தொற்று அதி­க­ரிக்­கிறது. இத­னால் பாதிக்­கப்­ப­டக்­கூடிய நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க ஏது­வாக அடுத்த இரண்டு வாரங்­களில் இங்­குள்ள மருத்­து­வ­மனை­கள் 800க்கும் மேற்­பட்ட படுக்கை­களை ஒதுக்கி வைக்­கும்.

அவ­ச­ர­மற்ற அறு­வை­சி­கிச்­சை­கள் ஒத்­தி­வைக்­கப்­படும். பொது மருத்­து­வ­ம­னை­கள் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க முன்­னு­ரிமை அளித்து அதற்­கேற்ப தங்­க­ளு­டைய வளங்­களை ஒதுக்­கும்.

சுகா­தார அமைச்சு நேற்று இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

இப்­போ­தைய தொற்று நிலவரத்தைச் சமா­ளிக்­க­க்கூ­டிய அள­வில் மருத்­து­வ­ம­னை­கள் இருக்­கின்­றன.

என்­றா­லும் தொற்று தொடர்ந்து கூடும் பட்­சத்­தில் அதற்­கேற்ப மருத்­து­வ­ம­னை­க­ளின் ஆற்­றலை வைத்­தி­ருக்க வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று அமைச்­சு தெரி­வித்­தது.

தொற்று கூடு­வ­தால் அவ­ச­ர­சிகிச்சை துறை­க­ளுக்கு நெருக்­கடி­ அதி­க­ரிக்க வாய்ப்பு இருக்­கிறது என்று சிங்­கப்­பூ­ரின் மருத்­துவ சேவைத் துறை இயக்­கு­நர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

ஆகை­யால், அவ­சர சிகிச்­சைத் துறை­களில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மருத்­து­வ­ம­னை­கள் ஏற்­கெ­னவே ஆயத்த நடை­மு­றை­க­ளைத் தொடங்கி இருக்­கின்­றன. மருத்­து­வர்­கள், தாதி­யர்­களைத் தயா­ராக வைத்­தி­ருப்­பது, மேலும் படுக்­கை­களுக்­குத் தயார் செய்­வது, இட­வசதி­க­ளைத் தயார்­ப்ப­டுத்­து­வது முத­லா­னவை இவற்­றில் அடங்­கும்.

இப்­போ­தைய நில­வ­ரப்­படி மருத்­து­வ­மனை படுக்­கை­களில் ஏறத்­தாழ 93% நிரம்பி உள்ளன. கூடு­த­லாக 200 படுக்­கை­கள் ஏற்­கெ­னவே சேர்க்­கப்­பட்டு இருக்­கின்­றன.

வெள்­ளிக்­கி­ழமை நில­வ­ரப்­படி மருத்­து­வ­ம­னை­களில் தீவிர சிகிச்சை பிரி­வில் ஒன்­பது பேர் சிகிச்சை பெற்று வந்­த­னர்.

மேலும் 50 இடங்­கள் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­காக தயா­ராக வைக்­கப்­பட்டு இருக்­கின்­றன. இப்­போதைக்கு இது போது­மா­னது என்று பேரா­சி­ரி­யர் மாக் கூறி­னார்.

கொரோனா நோயா­ளி­க­ளுக்­காக மொத்­தம் 670 தனிமைப் படுக்கை­கள் அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றன. இப்­போது பயன்­ப­டுத்­தப்­படும் படுக்­கை­கள் 8%கூட இல்லை. அடுத்த வாரம் மூன்று பொது மருத்­து­வ­மனை­களில் மேலும் 100 படுக்­கை­கள் தயார் செய்­யப்­படும் என்­றும் அவர் தெரி­வித்து இருக்­கி­றார்.

இத­னி­டையே, வீட்­டி­லேயே குண­ம­டை­யும் கொவிட்-19 நோயாளி­ க­ளுக்குத் தொலை­தூர சுகா­தா­ரச் சேவை வழி­யாக மேலும் ஆத­ரவு கிடைக்­கும். மருத்­து­வர்­களும் தாதி­யர்­களும் காணொ­ளி­கள் மூலம் ஆலோ­சனை வழங்­கு­வார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.