இரு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு

இரு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பு

1 mins read
d679f860-0177-4d79-a646-a900ed4c97d1
ஸக்கீர் அப்பாஸ் கான் (நடு) இரு குற்றச்சாட்டு களில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். ஆனால் இவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட வில்லை. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

நார்த் பிரிட்ஜ் ரோட்­டில் செயல்­படும் சிங்­கப்­பூர் ஸம் ஸம் உண­வகத்­தின் முன்­னாள் இயக்­கு­நரான ஸக்­கீர் அப்பாஸ் கான், 52, இப்­போது சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரு­கி­றார்.

அந்­தக் கடைக்குப் பக்­கத்­தில் செயல்­பட்ட விக்­டரி என்ற போட்டி உண­வ­கத்­தின் மேற்­பார்­வை­யா­ளர் மீது 2015ல் நடந்த தாக்­கு­த­லுக்கு கார­ண­கர்த்­தா­வாக ஸக்­கீர் இருந்­த­தாக தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து அவர் இப்­போது தண்­டனை அனு­ப­வித்து வரு­கி­றார். அவ­ருக்கு எதி­ராக மேலும் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் நிலுவை­யில் இருந்து வந்தன.

மனித உயி­ருக்கு ஆபத்­தை விளை­விக்­கும் வகை­யில் மூர்க்­க­மான செய­லைச் செய்­தது; மிரட்­டி­யது ஆகி­யவை தொடர்­பான இரண்டு குற்­றச்­சாட்­டு­களின் பேரில் அவர் முன்­ன­தாக விசாரணை கோரி இருந்­தார்.

இந்த நிலை­யில், ஸக்­கீர் அந்த இரண்டு குற்­றச்­சாட்­டு­களில் இருந்­தும் விடு­விக்­கப்­பட்டு இருக்­கி­றார். ஆனால், அவரை குற்­ற­மற்­ற­வர் என்று நீதி­மன்­றம் விடு­விக்­க­வில்லை. புதிய சாட்­சி­யம் தெரி­ய­வ­ரும்­போது அவர் மீது வழக்­குத் தொடுக்க முடி­யும்.