கைக்குழந்தை, கர்ப்பிணிகள் வீட்டிலேயே குணமடையலாம்

கைக்குழந்தை, கர்ப்பிணிகள் வீட்டிலேயே குணமடையலாம்

2 mins read
603a7eb0-3e34-42a1-a33d-2fa203f1bb9a
-

இரண்டாம் நிலை நிபந்தனை ஏற்பாட்டின்கீழ் அக்டோபர் 25ஆம் தேதி முதல் அனுமதி

கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­ப­தாக தெரி­ய­வ­ரும் கைக்­குழந்­தை­களும் கர்ப்­பி­ணிப் பெண்­களும் அக்­டோ­பர் 25 முதல் இரண்­டாம் வகை நிபந்­த­னை­க­ளின்கீழ் தங்­கள் வீடு­க­ளி­லேயே தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொண்டு குண­ம­டைய முடி­யும்.

தொற்று கார­ண­மாக மூன்று மாதம் முதல் ஓராண்டு வரை வய­துள்ள கைக்­கு­ழந்­தை­களுக்­கும் 36 வாரங்­க­ளுக்­கும் குறைந்த கர்ப்­பி­ணி­க­ளுக்­கும் ஏற்­படக்­கூ­டிய கடு­மை­யான பாதிப்­பு­கள் குறைவு என்­பதே இதற்கான கார­ணம் என்று சுகா­தார அமைச்சு தெரிவித்தது.

சிங்­கப்­பூ­ரில் தலை­காட்­டும் ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மி­ ஏற்­படுத்­தும் பாதிப்­பு­க­ளின் அடிப்­படை யில் இந்த மதிப்­பீடு இடம்­பெறு­வதா­க­வும் அமைச்சு விளக்­கி­யது.

இப்­போது முத­லா­வது நிலை நிபந்­தனை­க­ளின்கீழ் கைக்­கு­ழந்தை­களும் கர்ப்­பி­ணி­களும் வீட்­டி­லேயே குண­ம­டை­யும் செயல்­திட்­டத்­தின்­கீழ் வைக்­கப்­ப­டு­கி­றார்­கள். அவர்கள் குண­ம­டை­வதை சுகா­தார அமைச்சு கண்­கா­ணிக்­கிறது.

இரண்­டா­வது நிலை நிபந்­தனை­ க­ளின்­கீழ் அவர்­கள் வீடு­களில் தாங்­களா­கவே குண­ம­டைய முடி­யும்; அல்­லது சொந்த மருத்­து­வர்­க­ளின் பரா­ம­ரிப்­பின்­கீழ் சிகிச்சை பெற்று குண­மடை­ய­லாம்.

அவர்­கள் தங்­க­ளைத் தாங்­களே குறைந்­த­பட்­சம் 72 மணி நேரத்­திற்­குத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்; ஏர்­ஆர்டி பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்;

நோய் தொற்­றி­ய­வ­ரு­டன் அணுக்­கத் தொடர்­பில் இருந்­தி­ருப்­ப­தா­கத் தெரிய வரு­ப­வர்­க­ளுக்கு மூன்­றாம் நிலை நிபந்­தனை உரி­யது. இத்­தகை­யோர், ஏர்­ஆர்டி பரி­சோ­தனை செய்­து­கொண்டு சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும்.

இத­னி­டையே, அதிக சிகிச்சை உத­வி­கள் தேவைப்­ப­டக்­கூ­டிய ஆனால், மருத்­து­வ­ம­னை­யில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்­டிய அவ­சி­யம் இல்­லாத ஏறக்­கு­றைய 3,000 நோயா­ளி­கள் வீட்­டி­லேயே இருந்­த­படி பாது­காப்­பாக குண­மடைந்து இருக்­கி­றார்­கள்.

இவர்­களுக்கு மருத்­து­வ­ம­னை­களின் செயல்­திட்­டங்­கள் உதவி இருக்­கின்­றன என்று நேற்­றைய செய்­தி­யா­ளர் மாநாட்­டில் இணை பேரா­சி­ரி­யர் மாக் கூறி­னார்.

வீட்­டி­லேயே குண­ம­டை­யும் கொவிட்-19 நோயா­ளி­க­ளைப் பொறுத்­த­வரை தொலை­தூர சுகா­தா­ரச் சேவை­கள் நீட்­டிக்­கப்­பட்டு அதிக ஆத­ரவு வழங்­கப்­படும்.