மலாய்/முஸ்லிம் அமைப்புகளுக்கு வலியுறுத்து

மலாய்/முஸ்லிம் அமைப்புகளுக்கு வலியுறுத்து

1 mins read
a4a1edae-19fc-44fa-ade0-a5275d774370
-

மலாய்/முஸ்­லிம் பட்­டத்­தொ­ழி­லர்­கள் பல தொண்­டு­களை ஆற்ற முடி­யும். அவர்­கள் தங்­கள் வளங்­க­ளைத் திரட்டி சமூ­கத்­திற்கு உதவ வேண்டும். குறிப்­பாக மதி­யு­ரை­ஞர்­க­ளா­க­வும் முன்­மா­தி­ரி­யா­க­வும் திகழ்ந்து அவர்­கள் அடுத்த தலை­மு­றைக்கு வழி­காட்ட முடி­யும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று தெரி­வித்­தார்.

முஸ்­லிம் பட்­டத்­தொ­ழி­லர்­கள் சங்­கத்­தின் 4வது தேசிய மாநாடு நேற்று நடந்­தது. அதில் 500 பட்டத்­தொ­ழி­லர்களும் சமூ­கப் பங்­காளி­களும் உள்­ளூர் முஸ்­லிம் சமூ­க பிர­மு­கர்­களும் பங்கேற்றனர்.

மலாய்/முஸ்­லிம் பட்­டத்­தொ­ழி­லர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கிறது. அவர்­க­ளுக்­கே உரிய தேவை­களும் இருக்­கின்­றன. அவர்­க­ளி­டம் விருப்­பங்­களும் கவ­லை­களும் உள்­ளன. அவர்­க­ளுக்கு எப்­படி உதவ முடி­யும் என்­பதை சிங்­கப்­பூர் காண­வேண்டி இருக்­கும் என்று துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­திக் கொண்டு ஊழி­யர் அணி­யில் காலத்­திற்கு ஏற்­ற­வர்­க­ளாக மேம்­பட அவர்­க­ளுக்கு வாய்ப்­பு­களை ஏற்­படுத்­தித் தரு­வ­தும் இவற்­றில் அடங்­கும் என்று திரு வோங் கூறினார்.

முஸ்­லிம் சமூ­கத்தை மேலும் வெற்­றி­பெற்ற சமூ­க­மாக ஆக்­கு­வதற்கு உத­வும் புதிய உத்­தி­க­ளைப் பற்றி விவா­திப்­ப­தற்­காக ஒவ்­வொரு 10 ஆண்­டு­க­ளுக்­கும் ஒரு முறை முஸ்­லிம் பட்­டத்­தொ­ழி­லர் சங்க மாநாடு நடக்­கிறது.

மலாய்/முஸ்­லிம் சுய உத­விக் குழு, முஸ்­லிம் பட்­டத்­தொ­ழி­லர் சங்­கம் போன்ற மலாய்/முஸ்­லிம் அமைப்­பு­கள் ஒன்று சேர்ந்­தும் அர­சாங்­கத்­தோ­டும் வலு­வாக செயல்­பட்டு சமூ­கப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண வேண்­டும் என்­றாரவர்.