சிங்கப்பூர்- இந்தோனீசியா தற்காப்பு ஒத்துழைப்பு மேலும் ஒரு படி முன்னேறி இருக்கிறது.
சிங்கப்பூர் ராணுவத்தைச் சேர்ந்த 130க்கும் மேற்பட்ட வீரர்களும் இந்தோனீசிய ராணுவ வீரர்கள் 140 பேரும் மேற்கு ஜாவாவில் நடக்கும் வருடாந்திர இருதரப்பு பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர்.
'எக்ஸர்சைஸ் சாஃகார் இந்தோபூரா' என்ற அந்தப் பயிற்சி அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. இரு ராணுவங்களும் பரஸ்பர புரிந்துணர்வையும் வீரர்களுக்கு இடைப்பட்ட ஆழ்ந்த பிணைப்பையும் பலப்படுத்த அந்தப் பயிற்சி உதவுவதாக தற்காப்பு அமைச்சு கூறியது.

