தனிநபர் தரவு தவறாக பயன்படுத்தப்பட்டால் 'துயரம்' தந்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

தனிநபர் தரவு தவறாக பயன்படுத்தப்பட்டால் 'துயரம்' தந்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

1 mins read
5f0d7d06-883d-4ec1-b040-f0085aad28e9
-

ஒரு­வ­ரது தனி­ந­பர் தர­வு­க­ளைப் பிறர் தவ­றா­கப் பயன்­ப­டுத்தி, அத­னால் பாதிக்­கப்­ப­டு­ப­வ­ருக்கு 'மன­ரீ­தி­யான பெருந்­து­ய­ரம்' ஏற்­பட்­டால், தவறு இழைத்­த­வர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுப்­பது சாத்­தி­ய­மா­க­லாம்.

இருப்­பி­னும், அன்­றாட வாழ்க்­கை­யில் சாதா­ர­ண­மாக வந்­து­போகும் கோபம், வருத்­தம் போன்ற உணர்­வு­கள் இதற்­குத் தகு­தி­பெறாது. சட்­டத்­தின்­கீழ் 'மன­ரீ­தி­யான பெருந்­து­ய­ரம்' ஏற்­படும் நிலை­யில் ஒரு­வர் சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­லாம்.

ஐந்து சூழல்­க­ளைக்­கொண்டு தனி­ந­பர் தரவு பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் ஒரு­வர் தமக்கு நேர்ந்­துள்ள தவற்­றுக்கு வழக்கு தொடுக்­க­லாம்.

நிதி தொடர்­பான தர­வு­கள், உயர்­ம­திப்­பு­டைய சொத்­து­ரிமை, முத­லீ­டு­கள் போன்­றவை தொடர்­பான தக­வல்­கள் பாது­காப்­பாக வைத்­தி­ருக்­கப்­பட வேண்­டும்.

தற்­போ­தைய ஊழி­யர்­களும் கடந்­த­கால ஊழி­யர்­களும் இத்­தகைய தர­வு­க­ளைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு நிறு­வ­னங்­கள் அனு­ம­திக்­கக்­கூ­டாது.

தங்­கள் தர­வு­கள் மீண்­டும் மீண்­டும் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­டன் அறி­மு­க­மில்­லா­த­வர் இடையே பகிர்ந்­து­கொள்­ளப்­ப­டும்­போது ஒரு­வருக்­குத் துய­ரம் நேர­லாம்.

அச்­சூ­ழ­லில் அவர் வழக்கு தொடுக்­க­லாம்.

தர­வு­க­ளைத் தவ­றா­கப் பயன்­படுத்­தி­ய­வர் தனது செய­லுக்­குப் பொறுப்­பேற்க மறுத்­தால் அத­னால் பாதிக்­கப்­ப­டு­ப­வ­ருக்­குத் துய­ரம் ஏற்­ப­ட­லாம்.

இத்­த­கைய சூழல்­களில் ஒரு­வர் தமக்கு நேர்ந்­துள்ள துய­ரம் தொடர்­பாக வழக்கு தொடுத்­தால், முத­லில் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­படும் தர­வு­கள் ரக­சி­யத்­தன்மை தகு­தி­யு­டை­ய­வையா என்­பதை­யும் வழக்கு தொடுத்­த­வ­ரின் பின்­ன­ணி­யை­யும் நீதி­மன்­றம் ஆரா­யும்.

தர­வு­கள் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில், அதன் தாக்­கம் எத்­த­கை­யது என்­ப­தும் ஆரா­யப்­படும்.