தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடிகளில் சிக்கும் வெளிநாட்டினர் அதிகரிப்பு

1 mins read
50b9252b-2529-48f8-b2ef-cd33319221ff
-

சிங்­கப்­பூ­ரில் மோச­டிக்­கா­ரர்­கள் விரிக்­கும் வலை­யில் சிக்­கும் வெளி­நாட்­டி­னர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. 2020ஆம் ஆண்­டில் இக்­கு­றிப்­பிட்ட பிரி­வினர் $40.4 மில்­லி­யனை இழந்­துள்ள நிலை­யில் கடந்தாண்டு இந்த தொகை $88 மில்­லி­ய­னாக இரட்­டிப்­பா­கி­யுள்­ளது என்று காவல்­துறை புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன.

மேலும், 2020ல் வெளி­நாட்­டி­னர் மோச­டிக்கு ஆளான சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 3,431இலி­ருந்து கடந்த ஆண்டு 5,210ஆக உயர்ந்­தி­ருந்­தது. சிங்­கப்­பூ­ரில் பதி­வா­கும் மோச­டிச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துக்­கொண்டே போகின்­றன. 2021ல் பாதிக்­கப்­பட்­டோர் குறைந்­தது $633.3 மில்­லி­யனை இழந்­த­னர். அதற்கு முந்­தைய ஆண்­டில் இழப்­புத் தொகை $268.4 மில்­லி­ய­னாக இருந்­தது.

வேலை தொடர்­பான மோசடி, இணைய வர்த்­தக மோசடி, அதி­கா­ரி­யாக பாசாங்கு செய்­யும் மோசடி போன்­ற­வற்­றிற்கு வெளி­நாட்­டி­னர் அதி­கம் சிக்­கி­ய­தாக காவல்­து­றை­யி­னர் கூறினர்.

வேலை தொடர்­பான மோச­டிக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­களும் ஆளா­வ­தா­கக் கூறப்­பட்­டது.

"வெளி­நாட்டு ஊழி­யர்­கள், ஃபேஸ்புக் தளத்­தில் வேலை விளம்­ப­ரங்­களை நாடக்­கூ­டும். இவற்­றில் பொய்­யா­னவை பல. வேலை நிச்­ச­யம் கிடைக்­கும் என்ற உறு­தியை அளிக்­கும் இந்த விளம்­ப­ரங்­கள், முன்­ப­ணம் கேட்­பது வழக்­கம். தொகை செலுத்­தப்­பட்­ட­தும் முக­வ­ராக பாசாங்கு செய்­த­வ­ரைத் தொடர்­பு­கொள்ள முடி­யா­மல் போய்­வி­டும்," என்று 'டிரான்­சி­யன்ட் ஒர்க்­கர்ஸ் கவுன்ட் டூ' அமைப்­பின் பொது மேலா­ளர் திரு இத்­தன் குவோ கூறி­னார்.