சிங்கப்பூரில் 170 நீர்நாய்கள்

சிங்கப்பூரில் 170 நீர்நாய்கள்

2 mins read
ed741cd0-1c7d-4525-8863-5a091c44bbca
அண்மையில் சிலேத்தார் குடியிருப்புப் பகுதிக்குள் சில நீர்நாய்கள் புகுந்துவிட்டன. படம்: நீர்நாய்க் கண்காணிப்புக் குழு -

சிங்­கப்­பூ­ரில் நீர்­நாய்­க­ளின் எண்­ணிக்கை 170ஆக உயர்ந்­து­விட்­டது. இதைய­டுத்து, அந்த நீர்­நாய்­களில் சில­வற்றை வேறு இடத்­திற்கு மாற்­று­வது, கருத்­தடை செய்­வது உள்­ளிட்ட வழி­களில் அவற்­றின் எண்­ணிக்­கை­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்க தேசிய பூங்­காக் கழ­கம் ஓர் ஒருங்­கி­ணைந்த அணு­கு­மு­றை­யைக் கையாண்டு வரு­கிறது.

கடந்த வாரம் சிலேத்­தா­ரில் உள்ள ஓர் குடி­யி­ருப்­புப் பேட்­டைக்­குள் ஆறு நீர்­நாய்­கள் புகுந்­து­விட்­டன. பின்­னர் அவை பூங்­காக் கழக ஊழி­யர்­க­ளால் பாது­காப்­பாக வேறு இடத்­திற்கு மாற்­றப்­பட்­டன.

நீர்­நாய் இட­மாற்ற நட­வ­டிக்கை இடம்­பெற்­றது இதுவே முதன்­முறை என்று பூங்­காக் கழ­கத்­தின் காட்­டு­யிர் மேலாண்­மைக் குழும இயக்­கு­நர் ஏட்­ரி­யன் லூ குறிப்­பிட்­டார்.

அப்­ப­கு­தி­யில் எஞ்­சி­யுள்ள நீர்­நாய்­கள் இருக்­கும் புதர்ப்­ப­கு­தி­யைச் சுற்றி வேலி அமைக்­கப்­பட்­டுள்­ளது. அவை பாது­காப்­பாக மீட்­கப்­பட்­ட­தும் மனித நட­மாட்­டம் இல்­லாத, உண­வு­வ­ளம் மிகு­தி­யாக உள்ள பகு­திக்கு இட­மாற்­றம் செய்­யப்­படும் என்று டாக்­டர் லூ சொன்­னார்.

அண்­மை­யில் புக்­கிட் தீமா­வில் உள்ள ஒரு குடி­யி­ருப்­பில் 40க்கும் மேற்­பட்ட வளர்ப்பு மீன்­களை நீர்­நாய்­கள் தின்­று­விட்­ட­தாக வெளி­யான தக­வலை அடுத்து, தேசிய பூங்­காக் கழ­கத்­தின் இந்த அறி­விப்பு வெளி­யா­கி­யி­ருக்­கிறது.

இத­னி­டையே, குடி­யி­ருப்­புப் பேட்­டை­க­ளுக்­குள் நீர்­நாய்­கள் நுழை­வதைத் தடுப்­ப­தற்­கான நட­வடிக்­கை­களை எடுப்­பது தொடர்­பில் தேசிய பூங்­காக் கழ­க­மும் நீர்­நாய்க் கண்­கா­ணிப்­புக் குழு­வும் வீட்­டு­ரி­மை­யா­ளர்­க­ளு­ட­னும் குடி­யி­ருப்­புப் பேட்டை நிர்­வா­கி­க­ளு­ட­னும் இணைந்து பணி­யாற்றி வரு­வ­தாக தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரில் 79 நீர்­நாய்­கள் இருந்த நிலை­யில், அவற்­றின் எண்­ணிக்கை 150ஆக உயர்ந்­து­விட்­டது என்று கடந்த ஏப்­ரல் மாதம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், கிட்­டத்­தட்ட 17 குடும்­பங்­களில் ஏறக்­கு­றைய 170 நீர்­நாய்­கள் இருப்­ப­தாக பூங்­காக் கழ­கம் நேற்று தெரி­வித்­தது. அவற்­றுள், பீஷான், மரினா, ஸூக் நீர்­நாய்க் குடும்­பங்­கள், பீஷான்-அங் மோ கியோ பூங்கா, மரினா நீர்த்­தேக்­கம், சிங்­கப்­பூர் ஆறு மற்­றும் காலாங் ஆற்­றுப் பகு­தி­களில் அடிக்­கடி தென்­ப­டு­வ­தா­கக் கூறப்­பட்­டது.